Sunday, September 10, 2017

புளோரிடாவில், 'இர்மா' பீதி: 50 லட்சம் பேர் வெளியேற்றம்
DINAMALAR

பதிவு செய்த நாள்09செப்
2017
19:51




வாஷிங்டன், : கரீபியன் தீவுகளைப் புரட்டிப் போட்ட அதிவேக, 'இர்மா' சூறாவளி, கியூபாவை கடந்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நெருங்கியது. இதையடுத்து, புளோரி டாவில் வசிக்கும், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உட்பட, ௫௦ லட்சம் பேர், பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை, கடந்த மாத இறுதியில், 'ஹார்வே' புயல் தாக்கியது. இதில், அந்த நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஹூஸ்டன், சின்னாபின்னமானது.இந்நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில், கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிக சக்தி வாய்ந்த சூறாவளி உருவானது. இதற்கு, 'இர்மா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

'இர்மா' சூறாவளி, அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள, வட கிழக்கு கரீபியன் தீவுகளில், இரு நாட்களுக்கு முன் கரை கடந்தது. இதனால், கரீபியன் தீவு பெரும் நாசமடைந்துள்ளது.கரீபியன் தீவுகளை புரட்டிப் போட்ட இர்மா புயல், மேலும், வலிமை அதிகரித்து, கியூபாவின் வட கிழக்கு கரையை ஒட்டியுள்ள, கேமாகுவே தீவுக்கூட்டத்தில், கரையை கடந்துள்ளது. அமெரிக்காவை நெருங்கி வரும் இர்மா, புளோரிடா மாகாணத்தை, இன்று தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அந்த மாகாணத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உட்பட, ௫௦ லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.''புளோரிடாவில் உள்ள அனைவருமே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்; அதற்குத் தயாராக இருக்க வேண்டும்,'' என, புளோரிடா மாகாண கவர்னர், ரிக் ஸ்காட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அவசரகால முகமையின் தலைவர், பிராக் லாங் கூறுகையில், ''புளோரிடாவிலும், அருகில் உள்ள பகுதிகளிலும் சில நாட்களுக்கு, முழுமையாக மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ''நேரம் குறைந்துகொண்டே வருகிறது. வெளியேற வேண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், தாமதம் செய்யக்கூடாது. ''இர்மாவால் பாதிக்கப்பட்ட வீடுகளைத் திரும்பக் கட்டித் தர முடியும். ஆனால், வாழ்க்கையை திருப்பித் தர முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,'' என்றார்.

ஐந்தாம் எண் சூறாவளி!

புவியின் மேற்குப் பகுதியில் வீசும் வெப்ப மண்டல புயல்கள், சூறாவளி என அழைக்கப்படுகின்றன. இத்தகைய சூறாவளிகள், அவற்றின் வேகத்தை வைத்து, ஒன்று முதல் ஐந்து வரையிலான எண்களால் குறிக்கப்படுகின்றன. அதிவேகம் உடைய சூறாவளிக்கு, ஐந்தாம் எண் வழங்கப்படுகிறது.ஐந்தாம் எண் வழங்கப்பட்டுள்ள, இர்மா தாக்கியதில், கரீபியன் தீவுகளில், ௨௦ பேர் உயிரிழந்தனர். பல ஆண்டுகளுக்கு பின், கியூபாவை, ஐந்தாம் எண் சூறாவளி தாக்கியுள்ளது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...