பாலியல் வன்கொடுமை : நடுரோட்டில் மரணதண்டனை கொடுத்த ஏமன்!
எம்.குமரேசன்
குழந்தையைப் பாலியல் வன்கொடுமைசெய்து கொலைசெய்தவரை, மக்கள் மத்தியில் சுட்டுக் கொன்றது, ஏமன் அரசு.

மூன்று வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமைசெய்து கொலைசெய்த 41 வயது முகமது அல் மக்ரபி என்பவருக்கு, ஜூலை 31-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தலைநகர் சானாவில், தாகிர் சதுக்கத்தில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தண்டனைக்குரியவரை படுக்கவைத்து, பின்பக்கத் தலையில் 4 முறை சுடப்பட்டுத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொல்லப்பட்ட பின், முகமது அல் ரக்பியின் உடலைக் கைப்பற்ற மக்கள் முயன்றனர். ஆனால், போலீஸார் உடலை பத்திரமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். கொலைசெய்யப்பட்ட குழந்தையின் தந்தை யாக்யா அல் மதாரி , 'இப்போதுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன் ' என்றார். 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, ஏமனில் பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது இப்போதுதான்.
எம்.குமரேசன்
குழந்தையைப் பாலியல் வன்கொடுமைசெய்து கொலைசெய்தவரை, மக்கள் மத்தியில் சுட்டுக் கொன்றது, ஏமன் அரசு.

மூன்று வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமைசெய்து கொலைசெய்த 41 வயது முகமது அல் மக்ரபி என்பவருக்கு, ஜூலை 31-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தலைநகர் சானாவில், தாகிர் சதுக்கத்தில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தண்டனைக்குரியவரை படுக்கவைத்து, பின்பக்கத் தலையில் 4 முறை சுடப்பட்டுத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொல்லப்பட்ட பின், முகமது அல் ரக்பியின் உடலைக் கைப்பற்ற மக்கள் முயன்றனர். ஆனால், போலீஸார் உடலை பத்திரமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். கொலைசெய்யப்பட்ட குழந்தையின் தந்தை யாக்யா அல் மதாரி , 'இப்போதுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன் ' என்றார். 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, ஏமனில் பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது இப்போதுதான்.
No comments:
Post a Comment