Monday, October 2, 2017

சென்னையில் இன்று முதல் குப்பை சேகரிப்பு முறையில் மாற்றம்
பதிவு செய்த நாள்02அக்
2017
05:56




சென்னை: காந்தி ஜெயந்தி நாளான இன்று(அக்.,2) முதல், சென்னையில், குப்பை சேகரிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளிலேயே, குப்பையை, மட்கும் மற்றும் மட்காத குப்பையாக தரம் பிரித்து பெறப்படும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. அதே சமயம், ஒரே வளாகத்தில், தினமும், 100 கிலோவிற்கு மேல் குப்பையை உருவாக்கினால், அந்த நிர்வாகமே, குப்பையை மறுசுழற்சி செய்துகொள்ள வேண்டும்.

திடக்கழிவு மேலாண் மை விதியின் படி, நாள் ஒன்றுக்கு, 100 கிலோவிற்கு மேலாக குப்பையை உருவாக்கும் வணிக வளாகங்கள், திருமணமண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் குப்பையை, மாநகராட்சி இனி வாங்காது.அந்தந்த நிறுவனங்களே, குப்பையை, மறு சுழற்சி செய்யவோ, உரம் தயாரிக்கவோ வேண்டும்.

காந்தி ஜெயந்தி நாளான இன்று முதல், இத்திட்டம் அமலுக்கு வருகிறது. வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து, அனைத்து நாட்களிலும், மக்கும் குப்பையையும்; புதன்கிழமை மட்டும், மக்காத குப்பையையும், மாநகராட்சி ஊழியர்களிடம், பொதுமக்கள் வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சியின், 15 மண்டலங்களிலும் சேர்த்து, தினமும், 5,000 டன் குப்பை சேர்கிறது.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...