Sunday, December 10, 2017

திருநள்ளாரில் குவிந்த பக்தர்கள்

Added : டிச 10, 2017 02:11

காரைக்கால்:காரைக்கால் திருநள்ளார் சனி பகவான் கோவிலில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் நேற்று குவிந்தனர்.

காரைக்கால், திருநள்ளாரில் உள்ள, தர்பாரண்யேஸ்வரர் கோவில், நவக்கிரக ஸ்தலங்களில், சனி பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 19ல் நடைபெற உள்ளது.
சனிப்பெயர்ச்சி நடைபெறுவதற்கு முன்பே, திருநள்ளார் கோவிலுக்கு பத்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், நேற்று
கோவிலில் குவிந்தனர். அவர்கள், நளன் குளத்தில் நீராடி, நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து, சனி பகவானை தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection  Sparsh Upadhyay 28 Mar 20...