Monday, January 22, 2018

கட்டணம் ஒன்று.. டிக்கெட் மூன்று: அரசு பஸ்களில் அவதிப்பட்ட நடத்துநர்கள்

Published : 21 Jan 2018 07:59 IST

சென்னை



பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், நடத்துநர்களுக்கு போதிய அளவில் டிக்கெட்கள் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஒரே கட்டணத்துக்கு 3 டிக்கெட்களை கிழித்துக் கொடுத்து நடத்துநர்கள் அவதிப்பட்டனர்.

தமிழகத்தில் அரசு பஸ்களில் கட்டண உயர்வு நேற்று அதிகாலை முதல் அமலானது. ஆனால் நடத்துநர்களிடம் போதிய அளவில் டிக்கெட் வழங்கும் கருவி இல்லாததால், அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். கட்டண உயர்வுக்கு ஏற்றபடி டிக்கெட்களை வழங்காததால், ஒரே கட்டணத்துக்கு 3 பழைய டிக்கெட்களை வழங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். விரைவு பஸ்களில் 5 டிக்கெட்கள் வரை அவர்கள் கொடுக்கவேண்டி இருந்தது. இதற்காக பஸ்களை ஆங்காங்கே சிறிது நேரம் நிறுத்தவேண்டி வந்தது. இதனால், மாநகர பஸ்களை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக நடத்துநர்கள் சிலர் கூறும்போது, டிக்கெட் கொடுக்கும் கருவிகள் இல்லாத நடத்துநர்கள் டிக்கெட் கட்டணத்துக்கு ஏற்றவாறு டிக்கெட் கிழித்து தருகிறோம். ஏற்கெனவே, கட்டண உயர்வால், பொதுமக்கள் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சினையால் நாங்கள் மேலும் அவதிப்பட்டு வருகிறோம்’’ என்றனர்.

கனிவுடன் அணுக வேண்டும்

‘‘தமிழகத்தில் கட்டண உயர்வை தவிர்க்க இயலாத நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உரிய முறையில் விளக்கமளித்தும், எவ்வித வாக்குவாதங்களில் ஈடுபடாமலும் கனிவுடன் அணுக வேண்டும்’’ என நிர்வாக இயக்குநர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...