Monday, January 22, 2018

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

By DIN  |   Published on : 22nd January 2018 10:54 AM  | 
chennai_HC

சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையிட்டார்.
இதனை ஏற்ற உயர் நீதிமன்றம், இது குறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாகவும், தலைமை நீதிபதியின் அமர்வில் மனு விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பொதுவாக பொது நல மனுக்கள் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் விசாரிக்கப்படுவது வழக்கம் என்றாலும், இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணக்கு ஏற்கப்படும் என்று கூறப்படுகிறது.
பொதுமக்கள் படும் இன்னல்களைக் கருத்தில் ஏற்று இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஜார்ஜ் வில்லியம் விடுத்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...