Wednesday, May 2, 2018

அஞ்சலக மையங்களில் சிறப்பு பாஸ்போர்ட், 'மேளா'

Added : மே 01, 2018 23:16


சென்னை: விழுப்புரம், கடலுார், வேலுார் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள, அஞ்சலக சேவை மையங்களில், வரும், 5ம் தேதி, சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெறுகிறது.இது குறித்து, மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம், கடலுார், வேலுார் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள, அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில், வரும், 5ம் தேதி, சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடக்கிறது. பொதுமக்களின் தேவையை நிறைவேற்றவும், அடிக்கடி பயணம் செய்வோர் கால நீட்டிப்பு செய்ய, சிரமமின்றி விண்ணப்பங்கள் அளிக்கவும், இந்த சிறப்பு மேளா நடத்தப்படுகிறது.இந்த மேளாவில் பங்குபெற, passportindia.gov.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதன் வழியாக, விண்ணப்ப பதிவு எண் பெற்று, உரிய கட்டணத்தை செலுத்திய பின், சந்திப்புக்கான நேரத்தை பெற்றுக் கொள்ளலாம். புதிய மற்றும் மறு வெளியீட்டுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே, சிறப்பு மேளாவில் ஏற்கப்படும். இவ்வாறு மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...