Saturday, May 26, 2018

இணையதள வழிமின் கட்டணம் நிறுத்தம்

Added : மே 25, 2018 22:24

சென்னை, பராமரிப்பு பணி காரணமாக, திருச்சி, கரூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், நாளை வரை, இணையதள மின் கட்டண சேவையை, மின் வாரியம் நிறுத்தியுள்ளது.மின் வாரியத்தின், மின் கட்டண மையங்களில் மட்டுமின்றி, இணையதளம் மற்றும், 'மொபைல் ஆப்' என்ற செயலி வாயிலாகவும், மின் கட்டணத்தை செலுத்தலாம். சென்னை, கோவை, திருச்சி உட்பட, ஒன்பது மண்டலங்களாக, மின் வாரியம் செயல்படுகிறது.திருச்சி மண்டலத்தின் மின் கட்டண, 'சர்வரில்' பராமரிப்பு பணி நடக்கிறது.இதனால், கரூர், திருச்சி, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலுார், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த நுகர்வோர், நேற்று முதல், நாளை மாலை, 5:00 மணி வரை, இணையதளம் வாயிலாக, மின் கட்டணத்தை செலுத்த முடியாது என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...