Saturday, May 26, 2018

நம்பிக்கை, ஓட்டெடுப்பில்,குமாரசாமி ,அரசு, வெற்றி

dinamalar 26.05.2018

பெங்களூரு, கர்நாடக சட்டசபையில், நேற்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு, நம்பிக்கை ஓட்டெடுப்பில் சுலபமாக வெற்றி பெற்றது.




சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்த லில், பா.ஜ., தனிப் பெரும் கட்சியாக உருவெடுத் தது. அந்த கட்சியின்எடியூரப்பா, முதல்வராக பதவி ஏற்றார். ஆனால், பெரும்பான்மை நிரூபிப்பதற்கு முன், தன் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, ம.ஜ.த.,- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. ம.ஜ.த.,வின் குமாரசாமி, முதல்வராக பதவி ஏற்றார். பெரும் பான்மையை நிரூபிக்க, 15 நாள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.இதற்காக, நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப் பட்டிருந்த, காங்கிரஸ், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க் களும், தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்திய, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களும், சொகுசு பஸ்களில் சட்டசபைக்கு வந்தனர்.

முதல்வர்குமாரசாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரினார். அப்போது அவர் பேசுகையில்,''கடந்த, 2006ல், ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்ததால் தான், கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சி அமைக்க முடிந்தது. நானோ, என் தந்தை தேவகவுடாவோ, ஒரு போதும் அதிகாரத்துக்காக ஆசைப்படவில்லை,'' என்றார்.

இதன் பின், எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பேசிய தாவது:தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், முதல்வர் பதவியை கேட்காமல்,ம.ஜ.த.,வுக்கு விட்டுக் கொடுத்தது ஏன். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், உடனடியாக, விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; இல்லையெனில், போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, சட்டசபையிலிருந்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் நடத்தப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பில், ம.ஜ.த., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சுயேச்சைஎம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இருந்தனர். அனைவரும் அரசுக்குஆதரவு தெரிவித்ததால், நம்பிக்கை ஓட்டெடுப்பில், குமாரசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

காங்கிரசுக்கு சபாநாயகர் பதவி

சபாநாயகர் பதவிக்கு, ஆளுங் கூட்டணி சார்பில், காங்கிரசின் ரமேஷ் குமார், பா.ஜ., சார்பில், முன்னாள் அமைச்சர் சுரேஷ் குமார் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். ஆனால், , பா.ஜ., வேட்பாளர், தன் மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து, காங்கிரசின் ரமேஷ் குமார், சபாநாயகராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

No comments:

Post a Comment

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefits

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefit...