Saturday, May 26, 2018



பல்கலை பட்டமளிப்பு விழாமம்தாவுடன் பங்கேற்ற மோடி

dinamalar 26.05.2018

கோல்கட்டா:மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜியுடன், பிரதமர் நரேந்திர மோடி, விஸ்வ பாரதிபல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.




மேற்கு வங்கத்தில்,திரிணமுல், காங்., தலைவர்,மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர், கோல்கட்டாவில், நோபல் பரிசு பெற்ற, மறைந்த கவிஞர், ரவீந்திரநாத் தாகூரால் உருவாக்கப்பட்ட,

விஸ்வபாரதி பல்கலை பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.இந்த விழாவில், பல்கலை வேந்தரான, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மம்தா பானர்ஜி, அண்டை நாடான, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி பேசுகையில், ''மறைந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், இந்திய மாணவர்கள், உலகளாவிய கண்ணோட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என விரும்பினார். இந்திய அடையாளத்துக்கு எப்போதும் முன்னுரிமை அளித்தவர்,'' என்றார்.மேலும், மாணவர்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்யப்படாததற்கு, மோடி மன்னிப்புகேட்டார்.

இதற்கு முன், 2008ல், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, விஸ்வ பாரதி பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.அதேபோல், இந்த பல்கலை பட்டமளிப்பு விழாவில், மாநில

முதல்வர் பங்கேற்பது அபூர்வ நிகழ்வாக கருதப்படுகிறது.இதற்கு முன், 1972 - 77ல், மேற்கு வங்க முதல்வராக இருந்த, காங்.,கை சேர்ந்த சித்தார்த்த சங்கர் ரே, விஸ்வ பாரதி பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உள்ளார்.பிரதமர் மோடியை, மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்த விழாவில், இருவரும்பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...