Saturday, May 26, 2018

மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து வெளியேறும் எண்ணம் கிடையாது ஸ்டெர்லைட் திட்டவட்டம்




தூத்துக்குடியில் இருந்து வெளியேறும் எண்ணம் கிடையாது என ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Thoothukudi #Sterlite

மே 25, 2018, 05:00 PM

சென்னை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும், ஆலையை விரிவாக்கம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை பொதுமக்கள் தரப்பில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்ற போது வன்முறை வெடித்தது, போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்தும் தூத்துக்குடியில் பதட்டமான நிலை நீடிக்கிறது. ஆலையை மூட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகிறது. நேற்று மாவட்ட ஆட்சியர் பேசுகையில் ஆலை இனி செயல்பட வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து வெளியேறும் எண்ணம் கிடையாது என ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பி.ராம்நாத் தி இந்து ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அளித்து உள்ள பேட்டியில், இப்போது ஆலை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எந்தஒரு அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை. போராட்டங்கள் எல்லாம் திடீரென எங்கிருந்தோ உருவாகுகிறது. போராட்டங்களின் பின்னணியில் ஏதோ தூண்டுதல் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். தொண்டு நிறுவனங்கள் சிலவற்றிற்கு வெளிநாடுகளில் இருந்து இன்னும் பணம் வருகிறது.

அப்படிவரும் நிதி இதுபோன்ற வன்முறைக்கு திருப்பிவிடப்படுகிறது. இப்பிரச்சனைகளுக்கு சட்டப்பூர்வமாகவே தீர்வு காண முடியும் என கூறிஉள்ளார். ஆலையை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசியுள்ள பி.ராம்நாத், அப்படியொன்றை நாங்கள் இதுவரையில் யோசிக்கக்கூட இல்லை, 20 வருடங்களுக்கு முன்னதாக நாங்கள் தூத்துக்குடிக்கு வந்ததற்கு காரணம் உள்ளது, அந்த காரணம் இன்னும் மாறவில்லை. எனவே இரண்டாவது ஆலையை வேறு மாநிலங்களில் அமைக்க இடம் கிடைத்தும் நாங்கள் செல்லவில்லை, நாங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம். எங்களுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை, அதில் மாற்றம் இருக்காது என கூறிஉள்ளார்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...