Saturday, May 26, 2018

தூங்கும்போது பாம்பு கடித்தது தெரியாமல் பால் கொடுத்த தாயும், குடித்த குழந்தையும் பலி

Published : 25 May 2018 19:01 IST

பிடிஐ முசாபர்நகர்
 



கோப்புப்படம்

தூங்கும்போது பாம்பு கடித்தது தெரியாமல், அழுத குழந்தைக்கு பாலூட்டிய தாயும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில், மண்டலா கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண், அவரின் இரண்டரை வயது குழந்தையுடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அந்த பெண்ணுக்கு தெரியாமல், அவரை பாம்பு கடித்துள்ளது.

அதன்பின் சிறிது நேரத்தில் குழந்தை பசியெடுத்து பாலுக்கு அழுதுள்ளது. தன்னை பாம்பு கடித்தது தெரியாமல் குழந்தைக்கும் அந்த பெண் பாலூட்டியுள்ளார்.

ஆனால், சிறிது நேரத்தில் இருவரும் உயிருக்கு போராடவே, அவர்களை உறவினர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தாய் உயிரிழந்தார். சிகிச்சை பலன்அளிக்காமல் குழந்தை மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து முசாபர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சிங் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...