Sunday, December 1, 2019

படிக்க திணறிய ஆசிரியை உ.பி., பள்ளியில் அவலம்

Updated : டிச 01, 2019 00:03

உன்னாவ் : உத்தர பிரதேச மாநிலம், உன்னாவில் உள்ள ஒரு பள்ளியில், பாடத்தை படிக்க முடியாமல், மாணவர்கள் திணறினர். அவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியையும் படிக்க முடியாமல் திணறினார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. மாநிலத்தில் கல்வியின் தரம் மோசமாக உள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன.

சோதனை

இந்நிலையில், தான் சொல்லித் தரும் பாடத்தையே படிக்க முடியாமல் ஆசிரியை ஒருவர் திணறிய சம்பவம் அங்கு நடந்துள்ளது. உன்னாவ் நகருக்கு அருகில் உள்ள, சிக்கந்தர்பூர் சரவ்சி கிராமப் பள்ளியில், மாவட்ட கலெக்டர் தேவேந்திர குமார் பாண்டே, சமீபத்தில் திடீரென சோதனை செய்தார். அப்பள்ளி மாணவர்களை, பாடங்களை படித்துக் காட்டும்படி கூறியுள்ளார். ஹிந்தி மொழி வழியான பாடங்களை மாணவர்கள் படித்துக் காட்டினர். அவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

மாணவர்களின் ஆங்கில திறமையை சோதித்து பார்த்தார் கலெக்டர். அவர்கள், கோர்வையாக படிக்க முடியாமல் திணறினர். 'ஏன் மாணவர்கள் திணறுகின்றனர்? நீங்கள் கொஞ்சம் சொல்லித் தாருங்கள்' என, எட்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியையை பாடம் எடுக்கும்படி, கலெக்டர்கூறினார்.

கேள்வி

மாணவர்களே பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு, ஆசிரியை திக்கித் திணறி படித்தார். ஒரு பத்தியை படிப்பதற்குள், அவருக்கு மூச்சு முட்டிவிட்டது. 'நீங்களே சரியாக படிக்காவிட்டால், மாணவர்களுக்கு எப்படி சொல்லித் தருவீர்கள்?' என்று, கலெக்டர் கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து, மேலும் சில வகுப்பறைகளில் சோதனை நடத்தினார். அப்போது, இன்னொரு ஆசிரியையும், ஆங்கிலம் படிக்கத் தெரியாமல், திக்கித் திணறினார். இவர்கள் இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்ய, கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Man assaults delivery agent over ‘small’ delay, arrested

Man assaults delivery agent over ‘small’ delay, arrested Rahul.Singh1@timesofindia.com  17.08.2026 Meerut: A 22-year-old quick-commerce deli...