Sunday, December 1, 2019

கலிபோர்னியாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

Updated : நவ 30, 2019 13:27 | Added : நவ 30, 2019 13:20

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் மைசூரை சேர்ந்த 25 வயதான மாணவர் அபிஷேக் சுதேஷ் பட் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.



கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ் படித்து வந்த அபிஷேக், பணத்தேவைக்காக அங்குள்ள உணவுவிடுதியில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். பணி முடித்து வீடு திரும்பும்போது அடையாளம் தெரியாத நபரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர் .அபிஷேக்கின் உடல் கலிபோர்னியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதே உணவு விடுதியில் பணியாற்றிய அபிஷேக்கின் நண்பர் அளித்த தகவலின் பேரிலேயே அபிஷேக், கொலை செய்யப்பட்டது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.

மைசூரில் உள்ள குவெம்புநகரை சேர்ந்த யோகா குருவான சுதேஷ் சந்தின் மகன் தான் அபிஷேக். சுதேஷ் சந்த், 16 ஆண்டுகளாக யோகா பயிற்சி மையம் நடத்தி வருகிறார். மைசூரு வித்யா விகாஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்த அபிஷேக், 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் அமெரிக்கா சென்றுள்ளார்.

கொலை செய்யப்படும் அளவிற்கு அபிஷேக்கிற்கு யாருடன் விரோதம் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தான் கலிபோர்னியா பல்கலை.,யில் இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டிருப்பதாக அக்.,31 அன்று அபிஷேக், தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...