Monday, May 16, 2016

ரூ.105 கோடி பறிமுதல்;ரூ.48 கோடி திருப்பி அளிப்பு

இதுவரை ரூ.105 கோடி பறிமுதல்;ரூ.48 கோடி திருப்பி அளிப்பு

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.105.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.48 கோடி திருப்பி அளிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் பறக்கும் படையினர் கடந்த 13-ஆம் தேதியன்று வாகன சோதனை மேற்கொண்ட போது, வேலூர் மாவட்டத்தில் ரூ.14.38 லட்சமும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று, நாகை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், அரியலூர், கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் பொருள்களும், ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.2.62 கோடியாகும்.

தேர்தல் நடத்தை விதி நடைமுறை அமலானதிலிருந்து, இதுவரை மொத்தம் ரூ.105.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.47.91 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.105.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.48 கோடி திருப்பி அளிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் பறக்கும் படையினர் கடந்த 13-ஆம் தேதியன்று வாகன சோதனை மேற்கொண்ட போது, வேலூர் மாவட்டத்தில் ரூ.14.38 லட்சமும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று, நாகை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், அரியலூர், கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் பொருள்களும், ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.2.62 கோடியாகும்.

தேர்தல் நடத்தை விதி நடைமுறை அமலானதிலிருந்து, இதுவரை மொத்தம் ரூ.105.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.47.91 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...