Tuesday, August 15, 2017


செங்கல்பட்டில் சுகாதார அதிகாரிகள் நியமனம் அவசியம்:நகராட்சியில் சீர்கேடுகளை தவிர்ப்பது அத்தியாவசியம்

பதிவு செய்த நாள்15ஆக
2017
00:14


செங்கல்பட்டு:செங்கல்பட்டில், சுகாதார பணிகளை செய்ய, சுகாதார அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இந்நகராட்சி,6.8 சதுர கி.மீ.,யில் உள்ளது. நகரில், 275 தெருக்களும், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.இங்கு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 2012ல், பத்து வார்டுகள், தனியார் நிறுவனத்திடம், சுகாதார பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டது.துப்புரவுஇதில், 22 வார்டுகளை, நகராட்சி துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், ஏ.பி.சி., என, வகைப்படுத்தி, சுகாதார பணிகளை செய்கின்றனர்.சுகாதார பணிகளுக்கு, இரண்டு டிராக்டர்கள் மற்றும் இரண்டு ஆட்டோக்கள் உள்ளன. இதன் மூலம், நகராட்சியில், சேரும் குப்பையை அப்புறப்படுத்துகின்றனர்.

ஒரு நாளைக்கு, 42 டன் குப்பை சேருகிறது. தெருக்களில் உள்ள, மழைநீர் கால்வாய்களையும், ஊழியர்கள் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், ஊழியர் பற்றாக்குறையால், கால்வாயில் உள்ள குப்பை எடுக்காமல் உள்ளது.தற்போது, நகர் நல அலுவலர் மற்றும், சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அனைத்து பணிகளையும், ஆணையரே பார்த்து வருகிறார். இதனால், நகராட்சியில், ஒட்டுமொத்த பணிகளையும், அவரே பார்க்க வேண்டிய சூழல் உள்ளதால், சுகாதார பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

'டெங்கு' காய்ச்சல்

இந்நிலையில், அழகேசன் நகரைச் சேர்ந்த, ஜெகன்மோகன் என்பவருக்கு, 'டெங்கு' காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன் பின், நகராட்சி ஊழியர்கள் மற்றும் நகர்புற சுகாதார பணியாளர்கள், அழகேசன் நகர் மற்றும் ஜி.எஸ்.டி., சாலை ஆகிய பகுதியிலிருந்த, குப்பை மற்றும் மழை நீர் கால்வாயிலிருந்த அடைப்பு களை சீரமைத்தனர்.

தற்போது, மேற்கண்ட பகுதியில், தொடர்ந்து, கொசு மருந்து அடிக்கப்படுகிறது.இது போல, ஜே.சி.கே., நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அண்ணாநகர் உட்பட பல்வேறு பகுதியில், தேங்கி உள்ள குப்பை மற்றும் மழை நீர் கால்வாய்களையும் சீரமைத்து, கொசு மருந்து அடிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.எனவே, நகரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க, நகரில் சுகாதார பணிகள் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...