Tuesday, August 15, 2017

கண்ட இடங்களில் கொட்டப்படுது குப்பைகேள்விக்குறியாகும் சுகாதாரம்:தேவையாகிறது மக்களுக்கு விழிப்புணர்வு
பதிவு செய்த நாள்15ஆக
2017
01:45

சாத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் கண்ட இடங்களில் சகட்டுமேனிக்கு குப்பையை வீசுவது தொடர்கதையாவதால் மக்களின் சுகாதாரமான வாழ்வு கேள்விக்குறியாகிறது.விருதுநகர், சாத்துார், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளின் அருகில் ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் எல்லாம் புதிதாக குடியிருப்புகள் உருவாகி உள்ளன. 

நகராட்சியில் வசிப்பவர்கள் வீடுகள் கட்டி இங்கு குடிபெயர்ந்து வருகின்றனர். நகராட்சிக்கு மிக அருகில் இருந்த போதும் இப்பகுதிகளில் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள வேண்டியது ஊராட்சிகளின் பொறுப்பாக உள்ளது.வாறுகால் சுத்தம் செய்வது, குப்பை சேகரித்து அகற்றுவது,சாலை அமைப்பது போன்ற பணிகள் ஊராட்சி நிர்வாகத்தால் செய்யப்படுகிறது. இப்பகுதியில் வசிப்பவர்கள் காலியிடங்களையும், ரோட்டின் ஒரங்களையும் கழிவுகள், குப்பைகள் கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நகராட்சி பகுதிகளை விட நகராட்சியை யொட்டியுள்ள கிராமங்களில் அதிகளவு குப்பை சேர்ந்து காணப்படுகிறது. நச்சுப்புகைநகராட்சிகளில் உள்ளது போன்று குப்பைத்தொட்டிகள் வைக்கப்படுவதில்லை. குப்பையை கண்ட இடத்தில் வீசி செல்கின்றனர். இறைச்சிக்கழிவுகள்,உபயோகப் படுத்தப்பட்ட பழைய உடைகள், மெத்தை விரிப்புகள்,ரோட்டின் ஒரத்திலும், காலியாக உள்ள பிளாட்டுகளில் வீசி செல்கின்றனர். 

இவை காற்றுக்கு பறந்து வாறுகால், பாதாளசாக்கடை குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தி சுகாதாரகேட்டை உருவாக்குகிறது.சிலர் இவற்றினை தீ வைத்து கொளுத்துவதால் இதில் எழும் நச்சுப்புகையால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதி்க்கும் நிலை உள்ளது.சுற்றுச்சூழல் மாசு மாவட்ட நிர்வாகம் நகராட்சி மற்றும் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று குப்பையை வாங்கி வர வேண்டும் இவற்றை குப்பைக்கிடங்கு இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தி தற்காலிக பணியாளர்களையும் நியமித்துள்ளது. மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கும் படி பொதுமக்களிடம் பல முறை வலியுறுத்தியும் விழிப்புணர்வு முகாம், ஊர்வலம் நடத்தியும் உள்ளது.எனினும் கண்ட இடங்களில் பொதுமக்கள் குப்பையை வீசி விட்டு செல்வதும், தீ வைத்து எரிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

 இவற்றில் பிளாஸ்டிக் டம்ளர்கள், கேரி பேக்குகள் கலந்து கிடப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. வீடுகளில் குப்பை வாங்க வருபவர்கள் தெருவில் சிதறிக்கிடக்கும் குப்பையை அள்ள மாட்டோம் என கூறுவதாலேயே தெருவில் குப்பை வீசி செல்வதாக பொதுமக்கள் பலர் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். மாதம் ஒரு முறையாவது ஒவ்வொரு தெருவாக வந்து மாஸ்கிளீனிங் மேற்கொள்ள வேண்டும்.மாவட்ட நிர்வாகம் இதில் உரிய அறிவுரைகள் வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேவை மாஸ்கிளீனிங்சாத்துார் அய்யாச்சாமி, ''சாத்துார்: அமீர்பாளையம்,புதுப்பாளையம், படந்தால்,அயன்சத்திரப்பட்டி, வாழவந்தாள்புரம் உள்ளிட்ட பகுதிகள் நகராட்சியின் அருகில் உள்ளது.இங்கு தெருக்களில் குப்பை சிதறிக்கிடக்கின்றன. மாதம் ஒரு முறை கூட குப்பையை அள்ளிச்செல்ல ஆட்கள் வருவதில்லை. இவற்றால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.அப்பகுதியினர் தீ வைத்து எரிப்பதாலும் சுகாதாரகேடு ஏற்படும் நிலை உள்ளது. நகராட்சி பகுதிகளில் உள்ளது போன்று மாஸ்கிளீனிங் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.

No comments:

Post a Comment

NMC removes population rule for new medical colleges

NMC removes population rule for new medical colleges  SEAT EXPANSION  TIMES NEWS NETWORK  29.04.2026 Ahmedabad : The National Medical Commis...