Monday, August 21, 2017

விழுப்புரம் மாவட்டத்தில் 2 விபத்துகளில் 4 பேர் பலி

பதிவு செய்த நாள்21ஆக
2017
00:34

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடந்த இரண்டு விபத்துகளில், இரண்டு மாணவர்கள் உட்பட, நான்கு பேர் உயிரிழந்தனர். தஞ்சையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 35; சிங்கப்பூரில், தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த, சமீபத்தில், சொந்த ஊர் வந்தார். உறவினர்களுக்கு காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க, 'டாடா இண்டிகா' வாடகை காரில், நேற்று முன்தினம் இரவு, சென்னை புறப்பட்டார். காரை, தஞ்சாவூரைச் சேர்ந்த, 21 வயது டிரைவர் ஓட்டினார். நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், சலவாதி சந்திப்பில், 'பிரேக் டவுண்' ஆகி நின்றிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியது. இதில், கிருஷ்ணமூர்த்தி, கார் டிரைவர் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். போலீசார் வழக்கு பதிந்து, கரூரைச் சேர்ந்த, 30 வயது லாரி டிரைவரை கைது செய்தனர்.

மற்றொரு விபத்து : கோவையைச் சேர்ந்தவர் பிரவீன், 21; அதே பகுதியில் உள்ள குமரகுரு டெக்ஸ்டைல்ஸ் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர், உடன் படிக்கும், ஐந்து நண்பர்களுடன், இனோவா காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.அனைவரும், தனியார் விடுதியில் தங்கினர். நேற்று முன்தினம் நள்ளிரவு, விடுதியில் இருந்து காரில், இ.சி.ஆர்., சாலையில் மரக்காணம் சென்று, புதுச்சேரி திரும்பினர். பிரவீனின், 21 வயது நண்பர் காரை ஓட்டினார். கோட்டக்குப்பம் அடுத்த மஞ்சங்குப்பம் அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில், பிரவீன், காரை ஓட்டிய நண்பர் என, இருவர் இறந்தனர்; படுகாயம் அடைந்த நான்கு மாணவர்கள், ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...