Monday, August 21, 2017

ரூ.1.14 கோடி பழைய ரூபாய் நோட்டு பறிமுதல் : 2 பேர் கைது

பதிவு செய்த நாள்21ஆக
2017
00:17

மதுரை: மதுரையில் 1.14 கோடி வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் அருணாசலம் தலைமையில் கென்னட் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடந்தது. அப்போது டூ வீலரில் வந்த அண்ணாநகர் பாலாஜி, வண்டியூர் பிரபு ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பேசியதால் அவர்களை போலீசார் சோதனையிட்டபோது டூ வீலர் டேங்க் பையுக்குள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து பாலாஜியின் அண்ணாநகர் வீட்டில் சோதனையிட்டபோது 1.14 கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பா?

போலீசார் கூறியதாவது: இவர்கள் வைத்திருந்த பணம் வெளிநாடு வாழ் இந்தியர்களுடையதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பழைய நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பின், வெளிநாட்டு இந்தியர்களின் பணம் ரிசர்வ் வங்கியில் மாற்றப்படுவதாக வந்த தகவல் அடிப்படையில், பலரது பணத்தை இவர்கள் கமிஷன் அடிப்படையில் புதிய நோட்டுக்களாக மாற்றித்தந்துள்ளனரா என விசாரணை நடத்தி வருகிறோம். ஒரு கோடிக்கும் மேல் பணம் வைத்து மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...