Monday, August 21, 2017

ஏன்?  உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டது...ரயில்வே அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்




புதுடில்லி:'உ.பி.,மாநிலம், முசாபர்நகர் அருகே, ரயில் இருப்புப் பாதை பராமரிப்பு பணியால், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம்' என, ரயில்வே மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.



ஒடிசா மாநிலம் புரியில் இருந்து, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் நோக்கிச் சென்ற உத்கல் எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம், உ.பி.,யின், முசாபர்நகர் அருகே, தடம் புரண்டு விபத்துக் குள்ளானது.இதில், 23 பயணியர் உயிரிழந்தனர்; 97 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டுள்ளனர்; அவர்களில், 26 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது:ரயில் விபத்து நடந்த இடத்தில், முதற்கட்ட விசாரணை நடந்தது. இதில், ரயில் இருப்புப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரா மரிப்பு பணியால், விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.விபத்து நடந்த இடத்தில், பராமரிப்பு பணியில் பயன்படுத்தப்படும் சில சாதனங்கள் காணப்பட்டன. அந்த பகுதியில், தக்க முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ள பட வில்லை. ஆடியோ பதிவுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையின் அறிக்கை, ரயில்வே அமைச்சகத்திடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும். ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில், குழு அமைக் கப் பட்டுள்ளது. இக்குழு, 21ல், விசாரணையை துவங்குகிறது.தவறு இழைத்தவர்களுக்கு எதிராக, ரயில்வே அமைச்சர் உத்தரவுப்டி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விபத்து நடந்த இருப்புப் பாதையில், எந்த வகையில் பராமரிப்பு பணி நடந்தது என்பது பற்றி, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்து, விரிவான அறிக்கை சமர்ப்பிப்பார். ரயில்வே விதிகள், முறைப் படி பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும், அவர் ஆய்வு செய்வார்.

சில நேரங்களில், அவசரம் கருதி, உடனடியாக சில பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், அதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில், பராமரிப்பு பணி நடந்திருந்தால், அதற்கு முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பெட்டிகளை அகற்ற ராட்சத கிரேன்கள்

:முசாபர்நகர் அருகே,விபத்து நடந்த பாதையை சரிசெய்யும் பணிகளில், ஏராளமானஊழியர் கள் ஈடுபட்டுள்ளனர். தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்ற, நேற்று காலை முதல், 140 டன் கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின் றன.விபத்தில் நொறுங்கிய ரயில் பெட்டிகளில், உயிருக்கு போராடுபவர்களை யும், இறந்தவர் களின் உடல் களையும் மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. மீட்புப் பணி களில், தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மீட்புக்கு முன்னுரிமை

மீட்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.'டுவிட்டர்' சமூக வலை தளத்தில் நேற்று, அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:ரயில் விபத்து நடந்த இடத் தில் மீட்பு பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். தடம் புரண்ட, 13 பெட்டிகளில், ஏழு, அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. காயமடைந் தவர்களுக்கு, சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ரயில்வே வாரிய தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துக்கான பொறுப்பை, அவர்கள் ஏற்றுத் தான் ஆக வேண்டும்.

விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு, 3.5 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தோருக்கு, 50 ஆயிரம் ரூபாய், சிறு காயம் அடைந்தோ ருக்கு, 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.இவ்வாறு சுரேஷ் பிரபு கூறினார்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...