Tuesday, August 22, 2017

வங்கிகள் இன்று, 'ஸ்டிரைக்'

பதிவு செய்த நாள்22ஆக
2017
02:36

பொதுத்துறை வங்கி ஊழியர்கள், இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என, தெரிகிறது. வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அளவிலான, ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்களின், ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில், நாடு முழுவதும், இன்று வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதில், 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால், இன்று வங்கி பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, பொதுத்துறை வங்கி ஊழியர்களை கேட்ட போது, 'நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், வங்கிகள் திறந்திருக்கும். ஆனால், ஊழியர்கள் பணிக்கு செல்ல மாட்டார்கள். அதனால் வழக்கமான பணிகள் பாதிக்கும். அதே நேரத்தில், இணைய பரிவர்த்தனை, பாதிக்கப்படாது' என்றார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...