Tuesday, August 22, 2017

இலவச வில்லங்க சான்று சேவை மீண்டும் துவக்கம்
பதிவு செய்த நாள்22ஆக
2017
02:34

பதிவுத்துறை இணையதளத்தில், திடீரென முடங்கிய, இலவச வில்லங்க சான்று பெறும் சேவை, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. புதிதாக வீடு, மனை வாங்குவோர், முந்தைய பரிமாற்றங்களை அறிய, வில்லங்க சான்று பெற வேண்டும். ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்துவதற்கு பதிலாக, வில்லங்க விபரங்களை இலவசமாக அறியும் வசதி, பதிவுத்துறை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டது. இந்த சேவை, சில நாட்களாக முடங்கியதால், சொத்துகளின் வில்லங்க விபரங்களை அறிய முடியாத நிலை உருவானது. இது குறித்து, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில், பதிவுத்துறை இணையதளத்தில், இலவச வில்லங்க சான்று சேவை, நேற்று மாலை முதல், மீண்டும் செயல்பாட்டிற்கு வந்து உள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 09.07.2026