Wednesday, August 23, 2017

முக்கிய நகரங்களுக்கு புதிய விமான சேவை
பதிவு செய்த நாள்22ஆக
2017
23:17

சென்னை: 'அலையன்ஸ் ஏர்' விமான நிறுவனம், சென்னையில் இருந்து, மதுரை, கோவை, விஜயவாடா நகரங்களுக்கு, ஆக., 30ம் தேதியும், திருச்சிக்கு, 31ம் தேதியும், புதிய விமான சேவைகளை துவக்குகிறது.

குறைந்த கட்டணத்தில், சிறிய நகரங்களுக்கு, விமான சேவைகள் வழங்கும், மத்திய அரசின், 'உதான்' திட்டத்தில், சமீபத்தில், தமிழக அரசு இணைந்தது. இதன் ஒரு பகுதியாக, 'ஏர் - இந்தியா' நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'அலையன்ஸ் ஏர்' நிறுவனம், சென்னையில் இருந்து, 30ம் தேதி முதல், மதுரை, கோவை மற்றும் ஆந்திர மாநிலம், விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு, விமான சேவையை துவக்குகிறது. 31ம் தேதி முதல், திருச்சிக்கு விமானங்களை இயக்குகிறது.

இது குறித்து, 'ஏர் - இந்தியா' நிறுவனத்தின் மண்டல இயக்குனர் அருள்மணி கூறியதாவது:

இந்த புதிய சேவைக்கு, 'ஏ.டி.ஆர்., 72 - 600' ரக விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. அதில், 70 பேர் வரை பயணிக்கலாம். சென்னையில் இருந்து விஜயவாடாவிற்கு, காலை, 10:55 மணி; மதுரைக்கு, பிற்பகல், 2:45 மணி; கோவைக்கு, மாலை, 6:50 மணிக்கு, விமானங்கள் இயக்கப்படும். திருச்சிக்கு, காலை, 7:35 மணிக்கு, விமானம் இயக்கப்படும். விரைவில், துாத்துக்குடிக்கு விமான சேவை துவங்க திட்டமிட்டு உள்ளோம். சேலத்திற்கு, விமான சேவை துவங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். முன்கூட்டியே பதிவு செய்பவர்களுக்கு, டிக்கெட் கட்டணத்தில் சலுகைகள் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...