Wednesday, August 23, 2017

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு முதல் முறையாக நெல்லையில் பயிற்சி

பதிவு செய்த நாள்22ஆக
2017
23:03

திருநெல்வேலி: முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான, மூன்று நாள் பயிற்சி பட்டறை, முதல் முறையாக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரியில் நேற்று துவங்கியது.

முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள், தங்கள் பாடத் திட்டத்தின் ஓர் அங்கமாக, மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சியில்ஈடுபட வேண்டும். அவர்களின் மருத்துவப் படிப்பு முடியும் தருணத்தில், அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியை, கட்டுரையாக தருவதுடன், ஆராய்ச்சியை பதிப்பிக்கவும் வேண்டும். வழக்கமாக, முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள், இந்த ஆராய்ச்சி வழிகாட்டுதலுக்காக சென்னை, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு செல்ல வேண்டும். மாறாக, முதல் முறையாக, இந்த பயிற்சிபட்டறை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரியில் நேற்று துவங்கியது. மொத்தம், மூன்று நாட்கள் நடைபெறும் பயிற்சி பட்டறையை, எம்.ஜி.ஆர்., மருத்துவபல்கலை துணை வேந்தர் கீதா லட்சுமி துவக்கி வைத்தார்.

விழாவில் அவர்பேசுகையில், ''முதுகலை மருத்துவ மாணவர்கள், ஆராய்ச்சியை சிறப்பாகவும், சமூகத்திற்கு பயன் தரும் வகையிலும் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்ற வகையில், இந்த பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. ''முதல் முறையாக, இந்த பயிற்சி, சென்னைக்கு வெளியே திருநெல்வேலியில்நடக்கிறது,'' என்றார். பயிற்சியில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த, 100 மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...