Tuesday, August 1, 2017

திருமணத்துக்கு வந்த 'மாஜி' காதலன் : கட்டிய தாலியை பறித்த மாப்பிள்ளை

பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
21:06

குருவாயூர்: கேரள மாநிலம், குருவாயூர் கோவிலில் நடந்த திருமணத்திற்கு, மணப்பெண்ணின் முன்னாள் காதலன் வந்ததால் மோதல் ஏற்பட்டது. இதனால், திருமணமே நின்று போனது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், மார்க்.கம்யூ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. திருச்சூரைச் சேர்ந்த மணமக்களுக்கு, குருவாயூர் கோவிலில், நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை, தாலி கட்டிய சிறிது நேரத்தில், தன்னுடைய முன்னாள் காதலன் திருமணத்திற்கு வந்திருப்பதை, மணமகள் பார்த்தார். இதை, மாப்பிள்ளை காதில் மணமகள் முணுமுணுக்க, அவரது முகம் மாறியது. கோவிலில் இருந்து, மண்டபத்துக்கு வந்த பின், உறவினர்களிடம் விஷயத்தை மாப்பிள்ளை கூற, பரபரப்பு ஏற்பட்டது. 'போட்டோ, வீடியோ' எடுப்பதையும் நிறுத்த உத்தரவு பறந்தது. அடிதடியால் திருமண மண்டம் ரணகளப்பட்டது. மணமகளுக்கு கட்டப்பட்ட தாலி, பட்டு சேலை, நகைகளை, மாப்பிள்ளை வீட்டார் திரும்ப வாங்கினர்.
இந்த களேபரம் முடிந்த போது, பெண்ணின் முன்னாள் காதலனையும் காணவில்லை. தங்களுக்கு, 15 லட்சம் ரூபாயை, பெண் வீட்டார் தர வேண்டும் என, மாப்பிள்ளை தரப்பினர் புகார் செய்துஉள்ளனர். திருமணத்தை நிறுத்துவதற்காக, முன்னாள் காதலன் பற்றிய விஷயத்தை மணப்பெண் சொன்னாரா அல்லது பயத்தின் காரணமாக வெளிப்படுத்தினாரா என்பது புதிராக
உள்ளது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...