Saturday, September 9, 2017


'நீட்' தேர்வு - யாருக்கு அதிக பலன்

பதிவு செய்த நாள்09செப்
2017
02:04

'நீட்' தேர்வு மூலம் தமிழகம் முழுவதும் பரவலாக மாணவர்கள் பயனடைந்துள்ளனர். முன்பு கிருஷ்ணகிரி, நாமக்கல் என குறிப்பிட்ட சில மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் பலன் பெற்றனர். இந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. மருத்துவ படிப்புக்கான தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு தான் 'நீட்' (national eligibility cum entrance test). கடந்த முறை பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலாவ தேர்வு முறையில் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து மட்டும் 1,750 பேர் தேர்வாகினர். இந்த ஆண்டு இப்பகுதியில் இருந்து நீட் அடிப்படையில் 373 பேர் தான் தேர்வாகினர். மறைந்த மாணவி அனிதாவின் அரியலூரில் இருந்து 4 பேர் தான் கடந்த முறை வாய்ப்பு பெற்றனர். இம்முறை 21 பேர் தேர்வு பெற்றுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இம்முறை அதிக எம்.பி.பி.எஸ் இடங்களை பெற்றுள்ளனர்.






நீட் தேர்வு மூலம் சென்னையை சேர்ந்தவர்கள் 471 பேர் வாய்ப்பு பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகம். கடந்த முறை 113 மாணவர்கள் மட்டுமே தேர்வாகி இருந்தனர்.
109

நாமக்கல்லுக்கு தான் அதிக பாதிப்பு. இங்கு இருந்து கடந்த முறை 957 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தேர்வாகினர். இம்முறை 109 பேர் மட்டுமே வாய்ப்பு பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025