Saturday, September 9, 2017

வேலையை துறந்த ஆசிரியை உண்ணாவிரத போராட்டம்
பதிவு செய்த நாள்08செப்
2017
20:55




திண்டிவனம்: நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்த வலியுறுத்தி, தன் வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா, உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் அடுத்த வைரபுரம் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றியவர் சபரிமாலா, 34. இரு தினங்களுக்கு முன், 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரியும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்த வலியுறுத்தியும், இரண்டாம் வகுப்பு படிக்கும் தன் மகனுடன், பள்ளி வளாகத்தில் தர்ணா நடத்தினார். போராட்டத்துக்கு, போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம், வேலையை ராஜினாமா செய்வதாக ஆசிரியை கடிதம் அளித்தார். இந்நிலையில், திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் உள்ள தன் வீட்டின் எதிரில், நேற்று காலை, 8:15 மணிக்கு, உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.

அரசியல் கட்சியினர் அவரை சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சமாதானம் செய்தும், சபரிமாலா தன் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து, அங்கு போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025