'நீட்' தேர்வுக்கு எதிராக போராட்டமா? - பாய்கிறது நீதிமன்ற அவதிப்பு வழக்கு
பதிவு செய்த நாள்10செப்
2017
22:26
'நீட் தேர்வுக்கு எதிராக, மாணவர்களை துாண்டி விட்டு, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க, அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் முற்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிறையில் தள்ளப்படுவர்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.மருத்துவ கல்விக்கான, 'நீட்' தேர்வுக்கு எதிராக, தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சில அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர், பள்ளி, கல்லுாரி மாணவர்களை துாண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றனர். இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.இந்நிலையில், 'நீட் தேர்வுக்கு எதிராக, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடக்கூடாது' என, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனினும், தடையை மீறி, போராட்டத்தை வலுப்படுத்த, சமூக வலைதளங்கள் வாயிலாக, சில அரசியல் கட்சியினர் ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதிவு செய்த நாள்10செப்
2017
22:26
'நீட் தேர்வுக்கு எதிராக, மாணவர்களை துாண்டி விட்டு, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க, அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் முற்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிறையில் தள்ளப்படுவர்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.மருத்துவ கல்விக்கான, 'நீட்' தேர்வுக்கு எதிராக, தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சில அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர், பள்ளி, கல்லுாரி மாணவர்களை துாண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றனர். இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.இந்நிலையில், 'நீட் தேர்வுக்கு எதிராக, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடக்கூடாது' என, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனினும், தடையை மீறி, போராட்டத்தை வலுப்படுத்த, சமூக வலைதளங்கள் வாயிலாக, சில அரசியல் கட்சியினர் ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனால், தமிழகம் முழுவதும், காவல் துறையினர், சிறப்பு தனிப்படைகளை அமைத்துள்ளனர். உளவுத்துறை மற்றும் நுண்ணறிவு போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில், ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், அறவழியில் போராட தடை ஏதும் இல்லை; அதற்காக இடங்களும் ஒதுக்கி தரப்பட்டுள்ளன. காவல் துறையில், உரிய அனுமதி பெற்று, அந்த இடங்களில் போராட்டம் நடத்தலாம். ஆனால், மத்திய --- மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டம் என்பது போல, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்வது தண்டனைக்குரிய குற்றம்.இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும், ஈடுபட தயாராகி வரும், அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினரை ரகசியமாக கண்காணித்து வருகிறோம்.
அதற்காக, மாநிலம் முழுவதும், போலீஸ் அதிகாரிகளின் தலைமையில், சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இன்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கும் நாள் என்பதால், கல்வி நிறுவனங்கள் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்துவோர், நீதிமன்ற அவதிப்பின் வழக்கில், சிறையில் தள்ளப்படுவர். காலையில் கைது, மாலையில் விடுதலை என்ற நிலை இருக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
- நமது நிருபர் -
No comments:
Post a Comment