இளநிலை டாக்டர்களுக்கு அறுவை சிகிச்சை பயிற்சி
பதிவு செய்த நாள்11செப்
2017
00:47
சென்னை: ''மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள இளநிலை டாக்டர்களுக்கு, அறுவை சிகிச்சை பயிற்சி அளிக்கும் திட்டம், சென்னை மருத்துவ கல்லுாரியில் விரைவில் துவங்கப்படும்,'' என, டாக்டர் தீன் முகமது இஸ்மாயில் கூறினார்.சென்னை மருத்துவ கல்லுாரியில், முட நீக்கியல் துறை நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்ட தினத்தை நினைவுகூரும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. எட்டாவது ஆண்டு விழாவில், முட நீக்கியல் நிபுணரும் பேராசிரியருமான பாலைய்யா குட்டி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பதிவு செய்த நாள்11செப்
2017
00:47
சென்னை: ''மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள இளநிலை டாக்டர்களுக்கு, அறுவை சிகிச்சை பயிற்சி அளிக்கும் திட்டம், சென்னை மருத்துவ கல்லுாரியில் விரைவில் துவங்கப்படும்,'' என, டாக்டர் தீன் முகமது இஸ்மாயில் கூறினார்.சென்னை மருத்துவ கல்லுாரியில், முட நீக்கியல் துறை நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்ட தினத்தை நினைவுகூரும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. எட்டாவது ஆண்டு விழாவில், முட நீக்கியல் நிபுணரும் பேராசிரியருமான பாலைய்யா குட்டி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதில், டாக்டர் தீன் முகமது இஸ்மாயில் பேசியதாவது:உடல்களை வைத்து அறுவை சிகிச்சை பயிற்சி பெறுவதற்கான ஆராய்ச்சி கூடம், சென்னை மருத்துவ கல்லுாரியில், 2015ல் நிறுவப்பட்டது. இந்த பயிற்சி கூடத்தில், 500 டாக்டர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளை தவிர்த்து, மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் உள்ள இளநிலை டாக்டர்கள், முதுநிலை மாணவர்கள் ஆகியோருக்கு, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த துறையின் சார்பில், எலும்பு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சேமித்து வைக்கப்பட்ட எலும்புகளை வைத்து, 300 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. பிற மருத்துவ கல்லுாரிகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும், எலும்பு வங்கியை துவங்குவதற்கான வழிமுறைகள் குறித்து, பயிற்சி அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment