Monday, September 11, 2017

புறாவுக்கே டிக்கெட்டா? கண்டக்டருக்கு, 'மெமோ'
பதிவு செய்த நாள்10செப்
2017
23:46

சென்னை : அரசு பஸ்சில், புறாவுக்கு, டிக்கெட் கொடுக்காத கண்டக்டருக்கு, 'மெமோ' கொடுக்கப்பட்டு உள்ளது, போக்குவரத்து வட்டாரத்தில், அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து, எல்லவாடி என்ற பழங்குடியின கிராமத்திற்கு சென்ற, அரசு புறநகர் பஸ்சில், பயணி ஒருவர், ஒரு புறாவுடன் பயணித்தார். பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர்கள், புறாக்காரரிடம் டிக்கெட் கேட்டனர். தான் வாங்கிய, டிக்கெட்டை அவர் காட்டினார். புறாவுக்கான டிக்கெட்டை கேட்டதும், பயணியும், கண்டக்டரும் செய்வதறியாது விழித்தனர்.புறாவுக்கு, டிக்கெட் வழங்காத கண்டக்டருக்கு, அதிகாரிகள், 'மெமோ' வழங்கினர்.இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:சேலம் இரண்டாவது கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, ஒரு பஸ்சில் இந்நிகழ்ச்சி நடந்து உள்ளது. பாதிக்கப்பட்ட கண்டக்டர் புகார் அளிக்கவில்லை. பொதுவாக, 30 பறவை களுக்கு மேல் ஒருவர் கொண்டு சென்றால், அவற்றிற்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.மேலும், கூண்டுக்கிளி தவிர, பிற பறவைகளை பஸ்சில் ஏற்றக்கூடாது என்ற விதியும் உள்ளது. இதுகுறித்து, இன்று விசாரணை நடத்தப்படும். அப்போது, உண்மை நிலை தெரிய வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.07.2026