Monday, September 11, 2017

மழையால் பக்தர்கள் வருகை குறைவு திருவண்ணாமலை கோவில், 'வெறிச்'
பதிவு செய்த நாள்10செப்
2017
23:44

திருவண்ணாமலை : தொடர் மழை காரணமாக, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும், வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததால், நேற்று கோவில் வளாகம் வெறிச்சோடியது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, வார விடுமுறை நாட்களில், தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர்.தற்போது, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தொடர் மழை பெய்து வருவதால், வார விடுமுறையான, இரண்டு நாட்களாக, கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.உள்ளூர் பக்தர்கள் மட்டுமே வந்து, தரிசனம் செய்து சென்றனர். எப்போதும், பக்தர்கள் கூட்டத்தால், பரபரப்புடன் காணப்படும் அருணாசலேஸ்வரர் கோவில், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.07.2026