நீங்க விரும்புற எல்லாமே இருக்கு: சிங்கப்பூர் சுற்றுலா துறை அழைப்பு
பதிவு செய்த நாள்11செப்
2017
19:41

சென்னை: 'நிச்சயம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நாடாக, சிங்கப்பூர் இருக்கும். இந்திய சுற்றுலா பயணியர் அதிகம் வர வேண்டும்' என, சிங்கப்பூர் சுற்றுலாத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
சிங்கப்பூர் சுற்றுலாத் துறையும், பொருளாதார மேம்பாட்டு வாரியமும் இணைந்து, சுற்றுலா பயணியரை கவரும் வகையில், 'ஆர்வம் நிறைவேறும்' என்ற தலைப்பில், இந்தியாவின் முக்கிய நகரங்களில், பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கான குழுவினர், நேற்று சென்னை வந்தனர்.
இது குறித்து, சிங்கப்பூர் சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர், ஸ்ரீதர் கூறியதாவது:
சிங்கப்பூர், 50 ஆண்டுகளாக, உலக சுற்றுலா தலமாகவும், வர்த்தக மையமாகவும் அடையாளப் படுத்தப்பட்டு உள்ளது. உலகளவில் சுற்றுலா, முதலீட்டை ஈர்ப்பதில் போட்டி அதிகரித்துஉள்ளது. சுற்றுலா, வர்த்தகம் தொடர்பாக, இந்தியர்கள், சிங்கப்பூருக்கு வர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்படி, 2016ல், 11 லட்சம் இந்தியர்கள், சிங்கப்பூருக்கு பயணித்து உள்ளனர். இது, 2015ஐ காட்டிலும், 8 சதவீதம் உயர்வு. இந்தாண்டு, ஜன., - ஜூன் வரை, 6.6 லட்சம் பேர் பயணித்து உள்ளனர். இது, 15 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. இயற்கை அழகை ரசிப்போர், வித்தியாசமான பொருட்களை வாங்க விரும்புவோர், உணவு பிரியர்கள், கலை ஆர்வம் உள்ளோர், தொழில் துவங்குவோர் என, அனைத்து தரப்பினரையும், சிங்கப்பூர் நிச்சயம் திருப்திப்படுத்தும். இந்த பிரசாரத்தில், சிங்கப்பூரின் தனித்தன்மை குறித்து விவரிக்கிறோம். இதன் பயனாக, வரும் காலங்களில், இந்தியர்களின் வருகை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பதிவு செய்த நாள்11செப்
2017
19:41

சென்னை: 'நிச்சயம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நாடாக, சிங்கப்பூர் இருக்கும். இந்திய சுற்றுலா பயணியர் அதிகம் வர வேண்டும்' என, சிங்கப்பூர் சுற்றுலாத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
சிங்கப்பூர் சுற்றுலாத் துறையும், பொருளாதார மேம்பாட்டு வாரியமும் இணைந்து, சுற்றுலா பயணியரை கவரும் வகையில், 'ஆர்வம் நிறைவேறும்' என்ற தலைப்பில், இந்தியாவின் முக்கிய நகரங்களில், பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கான குழுவினர், நேற்று சென்னை வந்தனர்.
இது குறித்து, சிங்கப்பூர் சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர், ஸ்ரீதர் கூறியதாவது:
சிங்கப்பூர், 50 ஆண்டுகளாக, உலக சுற்றுலா தலமாகவும், வர்த்தக மையமாகவும் அடையாளப் படுத்தப்பட்டு உள்ளது. உலகளவில் சுற்றுலா, முதலீட்டை ஈர்ப்பதில் போட்டி அதிகரித்துஉள்ளது. சுற்றுலா, வர்த்தகம் தொடர்பாக, இந்தியர்கள், சிங்கப்பூருக்கு வர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்படி, 2016ல், 11 லட்சம் இந்தியர்கள், சிங்கப்பூருக்கு பயணித்து உள்ளனர். இது, 2015ஐ காட்டிலும், 8 சதவீதம் உயர்வு. இந்தாண்டு, ஜன., - ஜூன் வரை, 6.6 லட்சம் பேர் பயணித்து உள்ளனர். இது, 15 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. இயற்கை அழகை ரசிப்போர், வித்தியாசமான பொருட்களை வாங்க விரும்புவோர், உணவு பிரியர்கள், கலை ஆர்வம் உள்ளோர், தொழில் துவங்குவோர் என, அனைத்து தரப்பினரையும், சிங்கப்பூர் நிச்சயம் திருப்திப்படுத்தும். இந்த பிரசாரத்தில், சிங்கப்பூரின் தனித்தன்மை குறித்து விவரிக்கிறோம். இதன் பயனாக, வரும் காலங்களில், இந்தியர்களின் வருகை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment