Tuesday, September 12, 2017

வங்கியில், 'டிபாசிட்' அதிகரிப்பு  வருமான வரி துறை கண்காணிப்பு

வங்கியில், ஜூலைக்கு பின், 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் நிரந்தர வைப்பு தொகை வைத்த வாடிக்கையாளர்களை, வருமான வரித் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.





பண பரிமாற்ற அறிவிப்புக்கு பின், வரி வருவாயை பெருக்க, வங்கி மற்றும் வருமான வரித் துறை மூலம், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.முதல் கட்டமாக, கறுப்பு பணத்தை வெளி கொண்டு வரும் நோக்கில், ஜூலைக்கு பின்,

வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களில், 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல், இருப்பு வைத்துள்ளோரின் வருமான விபரம் கண்காணிக்கப்படுகிறது.
வங்கிகளில், நிரந்தர வைப்பு தொகைக்கு, 6 முதல், 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி, ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தால், வாடிக்கையாளர் வருமான வரி செலுத்த தேவையில்லை; அதற்கு மேல் இருந்தால், 'பான்' எண் உள்ளோர்,

வரித் துறையினர் குறி

10 சதவீதம்,இல்லாதோர், 20 சதவீத வரி செலுத்த வேண்டும்.வங்கி மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது:பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பின், வங்கியில் நிரந்தர வைப்பு தொகை அதிகரித்துள்ளது. இந்த வாடிக்கையாளர் மீது வருமான வரித் துறையினர் குறி வைத்துள்ளனர்.

மேலும், வைப்பு தொகைக்கான வட்டிக்கும் வரி வசூலிக்கப்படுகிறது. வங்கி வாடிக்கையாளர் விபரம், ஆன்- - லைன் மூலம் வருமான வரித் துறைக்கு சென்றுவிடும். அதன்படி வருமான வரி வசூலிப்பர். இந்த நெருக்கடியால், வங்கிகளில் நிரந்தர வைப்பு தொகை குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் --

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...