Tuesday, September 12, 2017

சேலம் உதவி கமிஷனருக்கு ஜனாதிபதி விருது கிடைக்காததேன்?

பதிவு செய்த நாள்11செப்
2017
19:51

சேலம் : உதவி கமிஷனருக்கு அறிவிக்கப்பட்ட, மத்திய அரசின் ஜனாதிபதி விருது, வழக்கை காரணம் காட்டி ரத்தாக உள்ளது. வழக்கை மறைத்த, உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என, தெரிகிறது. சேலம், மேற்கு சரக குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கண்ணன், 49. இவர், 2014ல், தீவட்டிப்பட்டி ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். அப்போது, அங்கு பணிபுரிந்த, எஸ்.ஐ., ராஜேஸ்வரி, ஓய்வு பெற்ற, டி.எஸ்.பி., கோபால் இடையே மோதல் ஏற்பட்டது. இதை, சரியாக விசாரிக்கவில்லை என, உயர் நீதிமன்ற பரிந்துரைப்படி, கண்ணன் மீது, 2015ல், வழக்கு பதிவானது. இந்நிலையில், டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்ற கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். போலீசில், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான ஜனாதிபதி விருதை, கண்ணனுக்கு வழங்க, அப்போதைய கிருஷ்ணகிரி, எஸ்.பி., திருநாவுக்கரசு பரிந்துரைத்தார். கிருஷ்ணகிரி, சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள், 'கண்ணன் மீது வழக்கு எதுவும் இல்லை' என, தெரிவித்து விட்டனர். கண்ணனுக்கு, 2016ம் ஆண்டுக்கான ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது. அதை, ஆக., 15ல் பெற இருந்தார்.

கண்ணன் மீது வழக்கு உள்ள நிலையில், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து, ஓய்வு பெற்ற, டி.எஸ்.பி., கோபால், முதல்வர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதிக்கு புகார் அனுப்பினார். இதனால், விருது வழங்குவது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விருதை ரத்து செய்வது குறித்து, மத்திய உள்துறை பரிசீலிக்கிறது. வழக்கு விபரங்களை மறைத்த, அப்போதைய அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.

உதவி கமிஷனர் கண்ணன் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு தொடரப்பட்டது. அது, குற்ற வழக்கு அல்ல. அதே நேரம், வழக்கை விசாரிக்க வேண்டிய கூடுதல், எஸ்.பி., பணியிடம் காலியாக இருந்தது. இதனால், விசாரணை முடிவில் தாமதம் ஏற்பட்டது. வழக்கை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. விருது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், விசாரணைக்கு பின் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...