கோவை சிறையில் தொடரும் உயிரிழப்பு! : 13 நாளில் 4 பேர் பலி; உணவில் ஊழல் என குற்றச்சாட்டு
பதிவு செய்த நாள்11செப்
2017
21:55
கோவை: கோவை மத்திய சிறையில், 13 நாட்களில், நான்கு கைதிகள் உயிரிழந்துள்ளனர்; சிறையில் கைதிகளுக்கு கொடுக்கும் உணவில் ஊழல் நடப்பதால், ஊட்டச்சத்து குறைந்து, உயிரிழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மத்திய சிறையில், விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என, 1,800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கான பிரத்யேக சிறையில், 40க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மத்திய சிறையில், உடல்நலக் குறைவால் கைதிகள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. 13 நாட்களில், நான்கு கைதிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு, கோவை மத்திய சிறையில் நடக்கும் உணவு ஊழல் தான் முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சிறையில் உள்ள கைதிகளுக்கு, சிந்தாமணி மூலம், உணவு பொருட்கள் ரேஷனில் வழங்கப்படுகின்றன. எப்.சி.ஐ., குடோனில் இருந்து அரிசி பெறப்படுகிறது. 1,800 கைதிகளுக்கு நாள்தோறும், 200 கிலோ பருப்பு வழங்க வேண்டும். ஆனால், 20 - 25 கிலோ தான் வழங்கப்படுகிறது. இதேபோன்று, வேர்கடலை வெறும், 20 சதவீதம் தான் வழங்குகின்றனர். எண்ணெய், காய்கறி, கோழிக்கறி என, அனைத்திலும் மிகவும் குறைந்த அளவு தான் வழங்குகின்றனர்.கைதிகளை பரிசோதிக்கும் சிறை மருத்துவமனை டாக்டர்கள், சத்து குறைபாடு உள்ளதாக கூறுகின்றனர்.
பதிவு செய்த நாள்11செப்
2017
21:55
கோவை: கோவை மத்திய சிறையில், 13 நாட்களில், நான்கு கைதிகள் உயிரிழந்துள்ளனர்; சிறையில் கைதிகளுக்கு கொடுக்கும் உணவில் ஊழல் நடப்பதால், ஊட்டச்சத்து குறைந்து, உயிரிழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மத்திய சிறையில், விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என, 1,800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கான பிரத்யேக சிறையில், 40க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மத்திய சிறையில், உடல்நலக் குறைவால் கைதிகள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. 13 நாட்களில், நான்கு கைதிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு, கோவை மத்திய சிறையில் நடக்கும் உணவு ஊழல் தான் முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சிறையில் உள்ள கைதிகளுக்கு, சிந்தாமணி மூலம், உணவு பொருட்கள் ரேஷனில் வழங்கப்படுகின்றன. எப்.சி.ஐ., குடோனில் இருந்து அரிசி பெறப்படுகிறது. 1,800 கைதிகளுக்கு நாள்தோறும், 200 கிலோ பருப்பு வழங்க வேண்டும். ஆனால், 20 - 25 கிலோ தான் வழங்கப்படுகிறது. இதேபோன்று, வேர்கடலை வெறும், 20 சதவீதம் தான் வழங்குகின்றனர். எண்ணெய், காய்கறி, கோழிக்கறி என, அனைத்திலும் மிகவும் குறைந்த அளவு தான் வழங்குகின்றனர்.கைதிகளை பரிசோதிக்கும் சிறை மருத்துவமனை டாக்டர்கள், சத்து குறைபாடு உள்ளதாக கூறுகின்றனர்.
உணவில் போதுமான சத்துகள் இல்லாததால், கைதிகளுக்கு வயிற்றுவலி, வாந்தி, பேதி, நெஞ்சு வலி, மஞ்சள் காமாலை, காய்ச்சல் போன்ற வியாதிகள்
ஏற்படுகின்றன.சிறையின் உள்ளே, உணவு பொருட்களை சப்ளை செய்ய வருவோர், 'பில்' கொண்டு வருவதில்லை. இதனால், எத்தனை கிலோ பொருட்கள் உள்ளே செல்கின்றன என்பதும் தெரியாது. இந்த உணவு ஊழல் குறித்து, சிறைத் துறை உயரதிகாரிகள் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
'புகாரில் உண்மை இல்லை'
கோவை சிறை, எஸ்.பி., செந்தில்குமாரிடம் கேட்ட போது, ''சிகிச்சையில் இருந்த கைதிகள் தான், உயிரிழந்துள்ளனர். சத்து குறைபாடு போன்ற காரணங்கள் இல்லை. கைதிகளின் உடல்நிலை குறித்து, முகாம் நடத்தி, சோதனை செய்யப்படுகிறது. உணவில் ஊழல் என்பதில் உண்மையில்லை. கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கிறோம்,'' என்றார்.
ஏற்படுகின்றன.சிறையின் உள்ளே, உணவு பொருட்களை சப்ளை செய்ய வருவோர், 'பில்' கொண்டு வருவதில்லை. இதனால், எத்தனை கிலோ பொருட்கள் உள்ளே செல்கின்றன என்பதும் தெரியாது. இந்த உணவு ஊழல் குறித்து, சிறைத் துறை உயரதிகாரிகள் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
'புகாரில் உண்மை இல்லை'
கோவை சிறை, எஸ்.பி., செந்தில்குமாரிடம் கேட்ட போது, ''சிகிச்சையில் இருந்த கைதிகள் தான், உயிரிழந்துள்ளனர். சத்து குறைபாடு போன்ற காரணங்கள் இல்லை. கைதிகளின் உடல்நிலை குறித்து, முகாம் நடத்தி, சோதனை செய்யப்படுகிறது. உணவில் ஊழல் என்பதில் உண்மையில்லை. கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கிறோம்,'' என்றார்.
No comments:
Post a Comment