தரமில்லா பாதுஷா விற்பனை : ரூ.50 ஆயிரம் இழப்பீடு
பதிவு செய்த நாள்11செப்
2017
19:50
சென்னை: தரம் குறைந்த பாதுஷா விற்ற கடைக்காரர், பாதிக்கப்பட்டவருக்கு, வழக்கு செலவு தொகையுடன், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், சூளையைச் சேர்ந்த, வேணுகோபால் தாக்கல் செய்த மனு: சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள, இனிப்பு மிட்டாய் கடையில், 250 கிராம் பாதுஷா வாங்கினேன். வீட்டிற்கு சென்று, அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில், வாந்தி, மயக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இது குறித்து, நேரில் புகார் கூறியும், என் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியும், இனிப்பு கடைக்காரர் கண்டு கொள்ளாததால், மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார். வழக்கு விசாரணையின் போது, இனிப்பு மிட்டாய் கடைக்காரர் சார்பில், யாரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, நீதிபதி ஜெயபாலன், நீதித்துறை உறுப்பினர், உயிரொலி கண்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: கிண்டியில் உள்ள, 'கிங்' ஆய்வு மையத்தில் சோதனை செய்ததில், 'பாதுஷா தரமற்றது' என, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. கடைக்காரரின் சேவையில் குறைபாடு உள்ளது. அதனால், மனுதாரருக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவு தொகையாக, 5,000 ரூபாயும், அவர் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பதிவு செய்த நாள்11செப்
2017
19:50
சென்னை: தரம் குறைந்த பாதுஷா விற்ற கடைக்காரர், பாதிக்கப்பட்டவருக்கு, வழக்கு செலவு தொகையுடன், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், சூளையைச் சேர்ந்த, வேணுகோபால் தாக்கல் செய்த மனு: சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள, இனிப்பு மிட்டாய் கடையில், 250 கிராம் பாதுஷா வாங்கினேன். வீட்டிற்கு சென்று, அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில், வாந்தி, மயக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இது குறித்து, நேரில் புகார் கூறியும், என் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியும், இனிப்பு கடைக்காரர் கண்டு கொள்ளாததால், மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார். வழக்கு விசாரணையின் போது, இனிப்பு மிட்டாய் கடைக்காரர் சார்பில், யாரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, நீதிபதி ஜெயபாலன், நீதித்துறை உறுப்பினர், உயிரொலி கண்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: கிண்டியில் உள்ள, 'கிங்' ஆய்வு மையத்தில் சோதனை செய்ததில், 'பாதுஷா தரமற்றது' என, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. கடைக்காரரின் சேவையில் குறைபாடு உள்ளது. அதனால், மனுதாரருக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவு தொகையாக, 5,000 ரூபாயும், அவர் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment