Saturday, September 9, 2017

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை
பதிவு செய்த நாள்08செப்
2017
20:33

தமிழகம், புதுச்சேரியில், இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், தீவிரமாக பெய்து வருகிறது. மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், அசாம், மேகாலயா, தெலுங்கானா, கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், தமிழக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், 'மஹாராஷ்டிரா முதல், தமிழகத்தின் வட மாவட்டங்கள் வரை, நில பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. மேலும், வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில், புதிய மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. 'அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் பரவலாக கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கர்நாடகாவில் வடக்கு, தெற்கு மாவட்டங்கள், கடலோர பகுதி, கேரளா, ஆந்திரா, அசாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், இரண்டு நாட்கள் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில், நேற்று காலை, 8.30மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், கொள்ளிடத்தில், ௯ செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025