மாநில செய்திகள்
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

தெற்கில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 10, 2017, 04:15 AM
சென்னை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கும் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் தெற்கு கர்நாடகம் முதல் தென் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்திருக்கிறது. சில இடங்களில் கனமழை பதிவாகி இருக்கிறது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னைக்கு மழை வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 32 செ.மீ. வரை மழை அளவு பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாகவே பெய்திருக்கிறது. கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் நேற்று வரை சராசரியாக 24 செ.மீ. மழை பெய்யும். ஆனால் 35 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது இயல்பைவிட 48 சதவீதம் அதிகமாகும். சென்னையில் இயல்பைவிட 13 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கும்பகோணத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. பாம்பனில் 11 செ.மீ., கொடைக்கானலில் 10 செ.மீ., அவினாசி, மதுரையில் தலா 9 செ.மீ., அரவக்குறிச்சி, சின்னக்கல்லார், பொன்னேரியில் தலா 7 செ.மீ., திருமங்கலம், பெரியகுளம், மணியாச்சி, ஓசூர், பரமத்திவேலூர், திருப்பூரில் தலா 6 செ.மீ., கொடுமுடி, மேட்டுப்பாளையம், கோபிசெட்டிப்பாளையம், வால்பாறை, நாமக்கல், சூளகிரி, பெருந்துரை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் மற்றும் பல இடங்களில் லேசான மழையும் பதிவாகி இருக்கிறது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

தெற்கில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 10, 2017, 04:15 AM
சென்னை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கும் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் தெற்கு கர்நாடகம் முதல் தென் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்திருக்கிறது. சில இடங்களில் கனமழை பதிவாகி இருக்கிறது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னைக்கு மழை வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 32 செ.மீ. வரை மழை அளவு பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாகவே பெய்திருக்கிறது. கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் நேற்று வரை சராசரியாக 24 செ.மீ. மழை பெய்யும். ஆனால் 35 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது இயல்பைவிட 48 சதவீதம் அதிகமாகும். சென்னையில் இயல்பைவிட 13 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கும்பகோணத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. பாம்பனில் 11 செ.மீ., கொடைக்கானலில் 10 செ.மீ., அவினாசி, மதுரையில் தலா 9 செ.மீ., அரவக்குறிச்சி, சின்னக்கல்லார், பொன்னேரியில் தலா 7 செ.மீ., திருமங்கலம், பெரியகுளம், மணியாச்சி, ஓசூர், பரமத்திவேலூர், திருப்பூரில் தலா 6 செ.மீ., கொடுமுடி, மேட்டுப்பாளையம், கோபிசெட்டிப்பாளையம், வால்பாறை, நாமக்கல், சூளகிரி, பெருந்துரை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் மற்றும் பல இடங்களில் லேசான மழையும் பதிவாகி இருக்கிறது.
No comments:
Post a Comment