Sunday, September 10, 2017

சர்க்கரை நோயாளிகளுக்கு ‘இனிப்பு’ச் செய்தி!



தற்போது இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

செப்டம்பர் 09, 2017, 12:43 PM

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்புச் செய்தி.

அதாவது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் ஒரு நாளமில்லா சுரப்புத் திரவத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து மட்டுமே பெருந்தீர்வாக உள்ளது. இந்நிலையில் முறையான உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களைத் தூண்டும் இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து விடுவதன் மூலம் உடல் பருமனையும், நீரிழிவு நோயையும் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நாளமில்லா சுரப்புத் திரவத்தை எலிகளுக்கு சோதனை முறையில் செலுத்திப் பார்த்ததில், உடல் பருமனையும் நீரிழிவையும் கட்டுப்படுத்தியதாம்.

மனிதர்களிடமும் இச்சோதனை வெற்றியடையும் என்றும், விரைவில் இன்சுலினுக்கு மாற்றாக இத்திரவத்தை ரத்தத்தில் செலுத்துவதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடமுடியும் என்றும் டானாபார்பர் புற்றுநோய் மைய விஞ்ஞானி புரூஸ் ஸ்பைகில்மென் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...