Sunday, September 24, 2017

மகளுக்கு, 'ஐ போன்' வாங்க சிங்கப்பூர் சென்ற தந்தை

பதிவு செய்த நாள்
செப் 23,2017 20:42



புதுடில்லி,:புகழ்பெற்ற, 'மொபைல் போன்' தயாரிப்பு நிறுவனமான, 'ஆப்பிள்' சமீபத்தில், 'ஐ போன் - 8, 8 பிளஸ்' ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இவை, குறிப்பிட்ட நாடுகளில் உள்ள, 'ஆப்பிள்' நிறுவனத்தின், நேரடி விற்பனை கடைகளில் மட்டுமே, முதற்கட்டமாக அறிமுகமானது.

தென்கிழக்கு ஆசிய நாடான, சிங்கப்பூரில் உள்ள, ஆப்பிளின் கடையில், நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது. உள்ளூர் மக்களுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், 13 மணி நேரம் வரிசையில் காத்திருந்து, புதிய, ஐ போனை வாங்கிச் சென்றனர். நம் நாட்டைச் சேர்ந்த, தொழிலதிபரான, ஆமின் அகமது தோலியாவும், 43, சிங்கப்பூர் சென்று, புதிய போனை வாங்கி உள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:என் மகளுக்கு, திருமண பரிசாக, 'ஐ போன் - 8 பிளஸ்' வாங்க முடிவு செய்தேன். இதற்காக, சிங்கப்பூர் வந்தேன். எனக்கு ஒன்றும், என் மகளுக்கு ஒன்றும் என, இரண்டு போன்கள் வாங்கினேன்; மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால், சோர்வு ஏற்பட்டது; எனினும், என் மகளின் மகிழ்ச்சிக்காக, இதை ஏற்றுக்
கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW  TIMES OF INDIA 02.02.2026 The slab rates for individuals under both the old and new tax regimes rem...