Saturday, September 9, 2017

இயங்காத ஆட்சி: இணையமே சாட்சி! 30 மாதங்களாக முடங்கியுள்ள கலெக்டர் முகநூல்
பதிவு செய்த நாள்
செப் 09,2017 03:49



ஒரு மாதம், இரு மாதங்களில்லை; முப்பது மாதங்களாக, கோவை மாவட்ட நிர்வாகம், முடங்கிக் கிடப்பதை ஊருக்கு மட்டுமின்றி, உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, மாவட்ட கலெக்டரின் முகநுால்.
புகார் எழுதி, வரிசையில் நின்று, டோக்கன் போட்டு, கலெக்டரைப் பார்த்து, மனு கொடுக்கும் நடைமுறைகள், மலையேறி வருகின்றன. மக்களுக்கு இதில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவே, அரசின் துறைகளுக்கும், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முகநுால் பக்கங்கள், தனித்தனி முகவரி கொடுத்து, அரசால் தொடங்கப்பட்டுள்ளன.வெறும் 513 பேர் மட்டுமே!
வெள்ளம், புயல் போன்ற அவசர காலங்களிலும், தேர்தல் போன்ற முக்கிய நேரத்திலும் அரசு நிர்வாகங்கள் இலவச தொலைபேசி எண்களை (டோல் ப்ரீ) அறிவித்து தொடர்பு கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொள்வது வழக்கம். ஆனால், தற்போது வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களே எல்லா நாளிலும், எல்லா நேரத்திலும் அந்த வேலையை எளிதாக்கி இருக்கின்றன.

அரசுத்துறைகளுக்கு முகநுால் கணக்கு தொடங்கிய பின்னர், பொதுமக்கள் பலரும் தங்களது பகுதி பிரச்னைகள், அரசு நிர்வாகம் தலையிடவேண்டிய விஷயங்களை முகநுாலில் பதிவிடும் பழக்கம் பெருகி வருகிறது. அதற்கு உடனுக்குடன், தீர்வும் காணப்படுகிறது. இந்த விஷயத்தில், கோவை மாநகராட்சி நிர்வாகமே, மிகச்சிறந்த உதாரணமாக விளங்கி வருகிறது.
கடந்த மார்ச் 6ம் தேதியன்று, பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பகுதி மக்கள் டாஸ்மாக் கடை பிரச்னையை, கோவை துணை கலெக்டர் முகநுால் பக்கத்தில் 'டேக்' செய்துள்ளது, மக்களின் அணுகுமுறைக்கான உதாரணம். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தனது முகநுால் பக்கத்தில் அரசு நிகழ்ச்சிகளை தவறாது பதிவிட்டு வருகிறார்.பொதுமக்களும் அவரது பக்கத்தில் தெருவிளக்கு பிரச்னை முதல் பல்வேறு புகார்களை அந்த முகநுாலில் பதிவிடுகின்றனர். நேற்றைய நிலவரப்படி, மதுரை கலெக்டரின் முகநுால் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை, 30 ஆயிரத்து 124 ஆகும். கோவை கலெக்டரின் முகநுால் பக்கத்தை பின் தொடர்பவர் எண்ணிக்கை, வெறும் 513 மட்டுமே.
இதற்குக் காரணம், அவரது பெயரிலான முகநுால், 30 மாதங்களாக முடங்கிக் கிடப்பது தான். கடந்த 2015, ஜனவரி 28 அன்று மாலை 5:08 மணிக்கு, அன்றைய கலெக்டராக இருந்த அர்ச்சனா பட்நாயக், குடியரசு தினத்தில் கொடியேற்றிய நிகழ்ச்சிக்கான படங்கள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியின் படங்களைப் பதிவேற்றியதே 'கோயம்புத்துார் மாவட்ட முகநுால் பிரிவு' பக்கத்தில் கடைசியாகும்.

'அட... அப்படியா!'

இதேபோல், கலெக்டரின் 'வாட்ஸ் ஆப்'பில் புகார் தெரிவித்தாலும் கூட, எந்த நடவடிக்கையும் இருப்பதில்லை என்பதே கோவை நகரிலுள்ள சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.இதற்கு சாட்சியாக, அவர்கள் பதிவிட்ட பல்வேறு விஷயங்களையும்கலக்கும் கமிஷனர்!
தமிழகத்தின் 'ஹைடெக்' நகரம் என்று பெயர் பெற்ற மாநகரம், கோவை. சமூக வலைதளங்களில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும், கோவை மக்களின் பங்களிப்பு அபரிமிதமாகவுள்ளது. இதற்கேற்ப கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன், மாநகராட்சி நிர்வாகத்தை வழி நடத்த, 25 'வாட்ஸ் ஆப்' குழுக்களை (அட்மின்) ஏற்படுத்தி, உடனுக்குடன் பல விஷயங்களுக்கு தீர்வு கண்டு வருகிறார்.

இவை தவிர, நகரிலுள்ள பல்வேறு தன்னார்வ நிறுவனங்களின் குழுக்களிலும் இணைந்து, அதில் குறிப்பிடப்படும் புகார்களுக்கு கூடுமான வரை உடனுக்குடன் நடவடிக்கையும் எடுக்கிறார்.-நமது நிருபர்-

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025