Tuesday, September 12, 2017

சிபிஎஸ்இ ஆசிரியர்கள் 33 பேருக்கு விருது

2017-09-12@ 00:23:44




புதுடெல்லி: நாடு முழுவதும் திறமையாக செயல்பட்ட 33 சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் கல்வித்திறன் மற்றும் முன்னேற்றம், ஆர்வம், அவர்கள் சார்ந்த துறையில் அவர்களுக்கு இருக்கும் நன்மதிப்பு மற்றும் அர்ப்பணிப்புவு, விடாமுயற்சி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த விருதுக்கு ஆண்டுதோறும் சிபிஎஸ்இ ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா கலந்துக் கொண்டு 33 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசை வழங்கினார். சிபிஎஸ்இ-யின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனிதா கார்வாலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘‘புதிய தலைமுறைகளை நல்ல முறையில் உருவாக்குவதன் மூலம் நாட்டை வடிவமைக்கும் ஆசிரியர்களின் பணி ஈடு இணையில்லாதது. ஆசிரியர்களே நாட்டின் உண்மையான பெருமையாக உள்ளனர். மாணவர்கள் மீதும் அதன் மூலம் நாட்டின் மீதும் இவர்கள் நீண்ட காலமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்'’ என்றார்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...