Tuesday, September 12, 2017

தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு உச்ச நீதிமன்றம் 18ல் விசாரணை

2017-09-12@ 00:21:29




புதுடெல்லி: தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 20 சதவீதம், ஆதி திராவிட வகுப்பினருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம் என மொத்தம் 69 சதவீதம் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு உள்ளதால், அரசியல் சட்டப் பாதுகாப்பு பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. அதனால், தமிழகத்தின் இந்த ஒதுக்கீட்டு முறையை உடனடியாக ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என கடந்த வாரம் நாகர்கோவிலை சேர்ந்த திருமால்மங்கள் என்ற மாணவி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வீல்கர் மற்றும் சந்திராசூட் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால், அது விசாரிக்கப்படவில்லை. எனவே, விசாரனையை 18ம் தேதி நடத்துவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...