Tuesday, September 12, 2017

நீட் தேர்வுக்கு எதிராக லண்டனில் பிரிட்டன் வாழ் தமிழர்கள் போராட்டம்
2017-09-11@ 17:17:22




லண்டன்: நீட் தேர்வுக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் கடல் கடந்து பிரிட்டன் வரை பரவி உள்ளது. பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் இந்திய தூதரம் முன்பு கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பிரிட்டன் வாழ் தமிழர்கள் நீட் தேர்வு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தப்படி நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பது அவர்களின் கருத்தாகும். கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் திணிக்கக்கூடாது என்று இந்திய அரசை பிரிட்டன் வாழ் தமிழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.07.2026