Wednesday, September 13, 2017

'பரஸ்பர விவாகரத்து வழக்கில் 6 மாத காத்திருப்பை தளர்த்தலாம்'
பதிவு செய்த நாள்12செப்
2017
22:41

புதுடில்லி: இந்து திருமண சட்டப்படி, பரஸ்பர விவாகரத்து வழக்கில், ஆறு மாதங்கள் காத்திருப்பு காலத்தை, உச்ச நீதிமன்றம் தளர்த்தி உள்ளது. இந்து திருமண சட்டப்படி, பரஸ்பர விவாகரத்து பெற விரும்பும் தம்பதி, நீதிமன்ற உத்தரவுப்படி, ஓராண்டு பிரிவுக்கு பின், விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். அதைத் தொடர்ந்து, ஆறு மாத காத்திருப்புக்கு பின், அவர்களுக்கு, நீதிமன்றம், விவாகரத்து அளிக்கும். விவாகரத்து தொடர்பான ஒரு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆதர்ஷ் கே.கோயல், உதய் யு.லலித் அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு: இந்து திருமண சட்டப்படி, பரஸ்பர விவாகரத்து கோரும் தம்பதி, ஓராண்டு பிரிவுக்கு பின், ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தலாம்.
திருமண உறவு எக்காரணத்தை முன்னிட்டும், சரி செய்ய முடியாமல், முறிந்து போகும் பட்சத்தில், கணவன், மனைவியை சேர்ந்திருக்க வேண்டும் என, நிர்ப்பந்திப்பது முறையற்றது.

அத்தகைய சூழ்நிலையில், விவாகரத்து வழங்குவதற்காக, இந்து திருமண சட்டம், பிரிவு - 13பி உருவாக்கப்பட்டது. திருமண பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பதற்கான வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அவசரமாக, அந்த திருமணத்தை ரத்து செய்யக்கூடாது என்ற நோக்கத்தில், ஆறு மாத காத்திருப்பு விதி அமல்படுத்தப்பட்டது.இந்த காத்திருப்பு காலம், கணவன், மனைவி ஆகியோரின் மனக்கஷ்டங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் இருக்கக் கூடாது. திரும்ப சேரும் வாய்ப்பே இல்லை எனும்போது, காத்திருப்பு காலம் தளர்த்தப்படலாம்.

காத்திருப்பு காலம், சம்பந்தப்பட்ட கணவன், மனைவியை மனதளவில் மேலும் துன்புறுத்தக்கூடும் என, நீதிமன்றம் கருதினால், காத்திருப்பு காலத்தை தளர்த்தி, விவாகரத்து அளிக்கலாம். 

அவ்வாறு, விவாகரத்து அளிக்கும்போது, ஜீவனாம்சம், குழந்தை களின் எதிர்காலம் போன்ற வற்றை ஆய்வு செய்து, தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...