எம்.ஜி.ஆர்., நினைவாக 100, 5 ரூபாய் நாணயங்கள்
பதிவு செய்த நாள்12செப்
2017
23:08

முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக, அவரது உருவம் பொறித்த, 100 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை, மாநிலம் முழுவதும் தமிழக அரசு கொண்டாடி வருகிறது; இதை மேலும் சிறப்பிக்கும் விதத்தில், எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிட வேண்டு மென்ற கோரிக்கை இருந்தது.
டில்லி வந்து பிரதமரை சந்தித்தபோது, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே, தனித்தனியே இந்த கோரிக்கையை வைத்தனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த வட்ட வடிவில் அமைந்த, 100 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2011ம் ஆண்டுக்கான இந்திய நாணயச்சட்டம் பிரிவின் கீழ், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. நுாறு ரூபாய் நாணயத்தில், வெள்ளி, 50 சதவீதமும், தாமிரம், 40 சதவீதமும், நிக்கல், 5 சதவீதமும், துத்தநாகம், 5 சதவீதமும் கலந்திருக்கும். 44 மி.மீ., விட்டம் உடைய, இந்த நாணயத்தைச் சுற்றிலும், வரிவரியாக, 200 கோடுகளும் இருக்கும். இந்த நாணயம், 35 கிராம் எடை உடையதாக இருக்கும். ஐந்து ரூபாய் நாணயத்தில், 75 சதவீதம் தாமிரம், 20 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் கலந்து காணப்படும். 23 மி.மீ., விட்டம் உடைய இந்த நாணயத்தைச் சுற்றிலும், 100 கோடுகள் இருக்கும்.இந்த நாணயத்தின் எடை, 6 கிராமாக இருக்கும். இந்த உத்தரவு உடனடியாக, அமலுக்கு வருவதாகவும், மத்திய அரசின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
நாணயங்கள் தயாரிக்கும் பணி முடிந்ததும், தமிழக அரசுடன் ஆலோசித்து, ஒரு குறிப்பிட்ட தேதியில், எம்.ஜி.ஆர்., நினைவு நாணயங்கள் வெளியிடப்படுமென, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
-- நமது டில்லி நிருபர் -
பதிவு செய்த நாள்12செப்
2017
23:08

முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக, அவரது உருவம் பொறித்த, 100 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை, மாநிலம் முழுவதும் தமிழக அரசு கொண்டாடி வருகிறது; இதை மேலும் சிறப்பிக்கும் விதத்தில், எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிட வேண்டு மென்ற கோரிக்கை இருந்தது.
டில்லி வந்து பிரதமரை சந்தித்தபோது, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே, தனித்தனியே இந்த கோரிக்கையை வைத்தனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த வட்ட வடிவில் அமைந்த, 100 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2011ம் ஆண்டுக்கான இந்திய நாணயச்சட்டம் பிரிவின் கீழ், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. நுாறு ரூபாய் நாணயத்தில், வெள்ளி, 50 சதவீதமும், தாமிரம், 40 சதவீதமும், நிக்கல், 5 சதவீதமும், துத்தநாகம், 5 சதவீதமும் கலந்திருக்கும். 44 மி.மீ., விட்டம் உடைய, இந்த நாணயத்தைச் சுற்றிலும், வரிவரியாக, 200 கோடுகளும் இருக்கும். இந்த நாணயம், 35 கிராம் எடை உடையதாக இருக்கும். ஐந்து ரூபாய் நாணயத்தில், 75 சதவீதம் தாமிரம், 20 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் கலந்து காணப்படும். 23 மி.மீ., விட்டம் உடைய இந்த நாணயத்தைச் சுற்றிலும், 100 கோடுகள் இருக்கும்.இந்த நாணயத்தின் எடை, 6 கிராமாக இருக்கும். இந்த உத்தரவு உடனடியாக, அமலுக்கு வருவதாகவும், மத்திய அரசின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
நாணயங்கள் தயாரிக்கும் பணி முடிந்ததும், தமிழக அரசுடன் ஆலோசித்து, ஒரு குறிப்பிட்ட தேதியில், எம்.ஜி.ஆர்., நினைவு நாணயங்கள் வெளியிடப்படுமென, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
-- நமது டில்லி நிருபர் -
No comments:
Post a Comment