ஆமதாபாத் - மும்பை, 'புல்லட்' ரயில்நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்
ஆமதாபாத்:ஆமதாபாத் - மும்பை இடையே, அதிவேக, 'புல்லட்' ரயில் இயக்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணிஆட்சி அமைந்த பின், தாக்கல் செய்யப்பட்ட, முதல் ரயில்வே பட்ஜெட்டில், 'நாட்டில், அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.அதில், குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலிருந்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பை வரை, முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில், ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற, பியுஷ் கோயல், புல்லட் ரயில் பற்றி, நேற்று கூறியதாவது:நாட்டின், முதல் புல்லட் ரயிலை இயக்குவதற்கான பணிகள், நாளை துவங்குகின்றன. ஆமதாபாத்தில் நாளை நடக்கும் விழாவில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர், ஷின்ஷோ அபேவும், புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல்லைநாட்டுகின்றனர்.
இத்திட்டம், ஜப்பானின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், 65 சதவீத தொகையை, 0.1சதவீத வட்டியில், ஜப்பான் வழங்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
320 கி.மீ., வேகம்
* ஆமதாபாத் - மும்பை இடையே, 508 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்பட உள்ள புல்லட் ரயில், மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும்; இது, 350 கி.மீ., வரை அதிகரிக்கப்படும்
* இந்த ரயில், சபர்மதி, வதோதரா உட்பட, 12 ரயில்வே ஸ்டேஷன்களில் நின்றுசெல்லும்
* மொத்த வழித் தடத்தில், 92 சதவீத துாரம், மேம்பாலத்தில் புல்லட் ரயில் பயணிக்கும்.6 சதவீதம் துாரம், சுரங்கப்பாதையாக இருக்கும். மீதமுள்ள, 2 சதவீத துாரம், தரையில் பயணிக்கும்
* 21 கி.மீ., துார சுரங்கப்பாதையில், 7 கி.மீ., துாரம், கடலுக்கு அடியில் அமைகிறது
• இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரமாண்ட வரவேற்பு
ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். குஜராத்தில், பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
அவரை வரவேற்க, ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, மஹாத்மா காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமம் வரை, 7 கி.மீ., துாரத்துக்கு வரவேற்பு பேரணி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட, 28 இடங்களில், 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆமதாபாத்:ஆமதாபாத் - மும்பை இடையே, அதிவேக, 'புல்லட்' ரயில் இயக்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணிஆட்சி அமைந்த பின், தாக்கல் செய்யப்பட்ட, முதல் ரயில்வே பட்ஜெட்டில், 'நாட்டில், அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.அதில், குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலிருந்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பை வரை, முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில், ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற, பியுஷ் கோயல், புல்லட் ரயில் பற்றி, நேற்று கூறியதாவது:நாட்டின், முதல் புல்லட் ரயிலை இயக்குவதற்கான பணிகள், நாளை துவங்குகின்றன. ஆமதாபாத்தில் நாளை நடக்கும் விழாவில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர், ஷின்ஷோ அபேவும், புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல்லைநாட்டுகின்றனர்.
இத்திட்டம், ஜப்பானின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், 65 சதவீத தொகையை, 0.1சதவீத வட்டியில், ஜப்பான் வழங்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
320 கி.மீ., வேகம்
* ஆமதாபாத் - மும்பை இடையே, 508 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்பட உள்ள புல்லட் ரயில், மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும்; இது, 350 கி.மீ., வரை அதிகரிக்கப்படும்
* இந்த ரயில், சபர்மதி, வதோதரா உட்பட, 12 ரயில்வே ஸ்டேஷன்களில் நின்றுசெல்லும்
* மொத்த வழித் தடத்தில், 92 சதவீத துாரம், மேம்பாலத்தில் புல்லட் ரயில் பயணிக்கும்.6 சதவீதம் துாரம், சுரங்கப்பாதையாக இருக்கும். மீதமுள்ள, 2 சதவீத துாரம், தரையில் பயணிக்கும்
* 21 கி.மீ., துார சுரங்கப்பாதையில், 7 கி.மீ., துாரம், கடலுக்கு அடியில் அமைகிறது
• இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரமாண்ட வரவேற்பு
ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். குஜராத்தில், பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
அவரை வரவேற்க, ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, மஹாத்மா காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமம் வரை, 7 கி.மீ., துாரத்துக்கு வரவேற்பு பேரணி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட, 28 இடங்களில், 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment