சி.பி.ஐ., பிடியில் ஜெயந்தி நடராஜன்
டில்லி, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறும்போது, 'சென்னையில், ஜெயந்தி நடராஜனின் வீடு, ஒடிசா மாநிலம், சுந்தர்கரில் உள்ள, 'எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்' நிறுவனத்தின் பதிவு அலுவலகம், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, அதன் பிராந்திய அலுவலகம் மற்றும் டில்லியில் உள்ள ஒரு வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை நடந்துள்ளது' என்றனர்.தற்போது, ஜெயந்தி நடராஜன் வெளிநாட்டில் உள்ளார். சி.பி.ஐ., பதிவு
செய்து உள்ள வழக்கில், ஜெயந்தி நடராஜன், எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங் நிறுவனத்தின், முன்னாள் மேலாண் இயக்குனர் உமங் கேஜ்ரிவால் மற்றும் சிலர்குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். ஜெயந்தி மீது, குற்றச் சதி மற்றும் பதவியை தவறாக பயன்படுத்துவது போன்ற பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு என்ன?
ஜெயந்தி நடராஜனுக்கு முன், அத்துறைக்கு பொறுப்பேற்றிருந்த ஜெய்ராம் ரமேஷ், இந்த நிறுவனத்துக்கு, சுற்றுச்சூழல் அனுமதி தர மறுத்துள்ளார். அந்த நிறுவனத்துக்கு, ஜெயந்தி நடராஜன் முறைகேடாக ஒப்புதல் அளித்து உள்ளதாக, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.ஜார்கண்ட் மாநிலம், சிங்பம் மாவட்டத்தில், 136 ஏக்கர் வனப் பகுதியைக் கொடுக்க, சட்டத்தை மீறி,அந்த நிறுவனத்திற்கு, 2012ல், ஜெயந்தி நடராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார். அது தொடர்பாக, வனத்துறை டைரக்டர் ஜெனரல் கருத்தை, அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, விரைவில், ஜெயந்தி நடராஜன், விசாரணைக்கு அழைக்கப்படுவார் என, சி.பி.ஐ., வட்டாரம் தெரிவித்தது.
ராகுலிடம் விசாரணை?
அமைச்சராக இருந்த ஜெயந்தி,சில தனியார் நிறுவனங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க, தாமதம் செய்ததாக, பிரதமர் அலுவலகம் மற்றும் கட்சித் தலைமைக்கு புகார்கள் வந்ததால் தான், அவர் பதவி விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் அவரோ, தாம் ராகுல் சொன்னபடி தான் செயல் பட்டதாக கூறியிருந்தார்.அதனால் ராகுலிடமும் விசாரணை நடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வீட்டில் பல மணி நேரம், 'ரெய்டு'
தனியார் நிறுவனத்திற்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் செய்த முறைகேடு தொடர்பாக, சென்னை யில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர், ஜெயந்தி நடராஜன், ௬௩, வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர். மேலும், டில்லி உட்பட நான்கு மாநிலங்களிலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன். 28 மாதம் அமைச்சராக இருந்த அவர், 2013 டிசம்பரில், பதவியை ராஜினாமா செய்தார்.
வழக்குப் பதிவு
அப்போது, கட்சிப் பணிக்கு செல்வதால், ராஜினாமா செய்ததாக கூறினார்.ஆனால், அடுத்த சில மணி நேரத்தில், டில்லியில் நடந்த, தொழில் பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய, காங்., துணைத் தலைவர், ராகுல், 'உங்களில் சிலர், சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, புகார் கூறினீர்கள்.'அத்தகைய
தாமதம் தவறு. அத்துறையில் உள்ள ஓட்டைகள், அடைக்கப்பட வேண்டியது அவசியம்' என்றார். அதன்பின், ஜெயந்தி பதவி விலகலுக்கு, இது தான் காரணம் என்பது தெரிய வந்தது.
ராகுல் மீது அதிருப்தியில் இருந்த ஜெயந்தி, கட்சியை விட்டு, 2015ல் வெளியேறினார். அப்போதே, ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜிண்டால் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட, சுரங்க அனுமதி
தொடர்பாக, அவர் விசாரிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது.இந்நிலையில், மூன்று ஆண்டுகள் கழித்து, அவர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.
அதைத் தொடர்ந்து, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜெயந்திவீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனை, பல மணி நேரம் நீடித்தது; சில ஆவணங்களும் சிக்கின.
5 இடங்களில் சோதனை
இது குறித்து, சென்னையில் உள்ள, சி.பி.ஐ., அதிகாரிகளை கேட்டபோது, 'டில்லியில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். எங்களுக்கு தகவல் இல்லை' என்றனர்.
தனியார் நிறுவனத்திற்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் செய்த முறைகேடு தொடர்பாக, சென்னை யில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர், ஜெயந்தி நடராஜன், ௬௩, வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர். மேலும், டில்லி உட்பட நான்கு மாநிலங்களிலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன். 28 மாதம் அமைச்சராக இருந்த அவர், 2013 டிசம்பரில், பதவியை ராஜினாமா செய்தார்.
வழக்குப் பதிவு
அப்போது, கட்சிப் பணிக்கு செல்வதால், ராஜினாமா செய்ததாக கூறினார்.ஆனால், அடுத்த சில மணி நேரத்தில், டில்லியில் நடந்த, தொழில் பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய, காங்., துணைத் தலைவர், ராகுல், 'உங்களில் சிலர், சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, புகார் கூறினீர்கள்.'அத்தகைய
தாமதம் தவறு. அத்துறையில் உள்ள ஓட்டைகள், அடைக்கப்பட வேண்டியது அவசியம்' என்றார். அதன்பின், ஜெயந்தி பதவி விலகலுக்கு, இது தான் காரணம் என்பது தெரிய வந்தது.
ராகுல் மீது அதிருப்தியில் இருந்த ஜெயந்தி, கட்சியை விட்டு, 2015ல் வெளியேறினார். அப்போதே, ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜிண்டால் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட, சுரங்க அனுமதி
தொடர்பாக, அவர் விசாரிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது.இந்நிலையில், மூன்று ஆண்டுகள் கழித்து, அவர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.
அதைத் தொடர்ந்து, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜெயந்திவீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனை, பல மணி நேரம் நீடித்தது; சில ஆவணங்களும் சிக்கின.
5 இடங்களில் சோதனை
இது குறித்து, சென்னையில் உள்ள, சி.பி.ஐ., அதிகாரிகளை கேட்டபோது, 'டில்லியில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். எங்களுக்கு தகவல் இல்லை' என்றனர்.
டில்லி, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறும்போது, 'சென்னையில், ஜெயந்தி நடராஜனின் வீடு, ஒடிசா மாநிலம், சுந்தர்கரில் உள்ள, 'எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்' நிறுவனத்தின் பதிவு அலுவலகம், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, அதன் பிராந்திய அலுவலகம் மற்றும் டில்லியில் உள்ள ஒரு வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை நடந்துள்ளது' என்றனர்.தற்போது, ஜெயந்தி நடராஜன் வெளிநாட்டில் உள்ளார். சி.பி.ஐ., பதிவு
செய்து உள்ள வழக்கில், ஜெயந்தி நடராஜன், எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங் நிறுவனத்தின், முன்னாள் மேலாண் இயக்குனர் உமங் கேஜ்ரிவால் மற்றும் சிலர்குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். ஜெயந்தி மீது, குற்றச் சதி மற்றும் பதவியை தவறாக பயன்படுத்துவது போன்ற பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு என்ன?
ஜெயந்தி நடராஜனுக்கு முன், அத்துறைக்கு பொறுப்பேற்றிருந்த ஜெய்ராம் ரமேஷ், இந்த நிறுவனத்துக்கு, சுற்றுச்சூழல் அனுமதி தர மறுத்துள்ளார். அந்த நிறுவனத்துக்கு, ஜெயந்தி நடராஜன் முறைகேடாக ஒப்புதல் அளித்து உள்ளதாக, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.ஜார்கண்ட் மாநிலம், சிங்பம் மாவட்டத்தில், 136 ஏக்கர் வனப் பகுதியைக் கொடுக்க, சட்டத்தை மீறி,அந்த நிறுவனத்திற்கு, 2012ல், ஜெயந்தி நடராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார். அது தொடர்பாக, வனத்துறை டைரக்டர் ஜெனரல் கருத்தை, அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, விரைவில், ஜெயந்தி நடராஜன், விசாரணைக்கு அழைக்கப்படுவார் என, சி.பி.ஐ., வட்டாரம் தெரிவித்தது.
ராகுலிடம் விசாரணை?
அமைச்சராக இருந்த ஜெயந்தி,சில தனியார் நிறுவனங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க, தாமதம் செய்ததாக, பிரதமர் அலுவலகம் மற்றும் கட்சித் தலைமைக்கு புகார்கள் வந்ததால் தான், அவர் பதவி விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் அவரோ, தாம் ராகுல் சொன்னபடி தான் செயல் பட்டதாக கூறியிருந்தார்.அதனால் ராகுலிடமும் விசாரணை நடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment