Saturday, September 9, 2017

ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் இன்று இயங்கும்
பதிவு செய்த நாள்08செப்
2017
20:34

சென்னை: 'அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்கள், இன்று இயங்கும்' என, அரசு அறிவித்துள்ளது. 'வாகன ஓட்டிகள் கட்டாயம், 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருக்க வேண்டும்' என, தமிழக அரசும், நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. ஏராளமானோர், 'டிரைவிங் லைசென்ஸ்' இல்லாமல் உள்ளனர். பலர், லைசென்சை தொலைத்து விட்டு, நகல் மட்டுமே வைத்துள்ளனர். இது போன்றோர், லைசென்ஸ் பெற, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் குவிந்து வருகின்றனர்; இதனால் அங்கு, கூட்டம் நிரம்பி வழிகிறது.

அவர்கள் பயன்பெறும் வகையில், விடுமுறை நாளான இன்று, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்கள் இயங்கும் என, அரசு அறிவித்து உள்ளது. 

டிரைவிங் லைசென்ஸ் புதிதாக பெறுதல், புதுப்பித்தல், நகல் லைசென்ஸ் வழங்குதல் போன்ற பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த வாய்ப்பை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.



No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025