Tuesday, September 5, 2017


அல்லல்கள் போக்கும் ஆலங்குடி குரு பகவான்

!

ஞான தட்சிணாமூர்த்தியாக குருபகவான் காட்சி தந்து அருளும் திருத்தலம் ஆலங்குடி. அப்போதைய தஞ்சை மாவட்டத்திலும் இப்போதைய திருவாரூர் மாவட்டத்திலும் அமைந்து உள்ளது ஆலங்குடி குரு பகவான் திருக்கோயில்.

நவக்கிரக திருத்தலங்களில் இது குரு பகவானுக்கு உரிய திருத்தலம். இங்கே சிவனாரின் திருநாமம் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர். இங்கே, குரு தட்சிணாமூர்த்தி, கல்வியும் ஞானமும் புத்தியில் தெளிவும் தந்து அருள்பாலிக்கிறார்.

சுந்தரர் பெருமான் இங்கே உள்ள சிவபெருமானைத் தரிசிக்க வந்தார். அப்போது ஆற்றில் வெள்ளப் பெருக்கை ஏற்படச் செய்து சுந்தரரைச் சோதித்தார் ஈசன்.

வெள்ளப்பெருக்கை அடுத்து ஆற்றின் மறுகரையில் நின்று தவித்தார் சுந்தரர். அப்போது ஓடத்தைச் செலுத்தி வந்தவர், அவரை ஏற்றிக் கொண்டு கோயில் இருக்கும் கரையில் விடுவதாக அழைத்து வந்தார். வழியில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. தண்ணீரில் தத்தளித்தது ஓடம். எப்போது வேண்டுமானாலும் கவிழும் அபாயம்.

அந்த நிலையிலும் சிவத்தையே தொழுதார் சுந்தரர். இதில் நெகிழ்ந்து மகிழ்ந்த சிவனார், அவருக்குக் காட்சி தந்தார். ஓடக்காரராக வந்தது தாமே என உணர்த்தினார்.

அப்போது சுந்தரர் பெருமானுக்கு, ஞானகுருவாக இருந்து உபதேசித்து அருளினார் தென்னாடுடைய சிவனார். இங்கே குருப்பெயர்ச்சி நன்னாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அல்லல்கள் அனைத்தையும் போக்கி அருளும் ஆலங்குடி ஞானகுருவை தரிசியுங்கள்.

உங்களுக்கு அருகாமையில் இது போன்ற ஆலயங்களை கண்டறிய, MyTemple'ன் இந்த லிங்க்'ல் க்ளிக் செய்யுங்கள்: https://goo.gl/13k94a

No comments:

Post a Comment

NEWS TODAY 13.12.2025